Top posting users this month
No user |
Similar topics
ரூ.66 கோடி சொத்து குவிப்புக்கு ஆதாரங்கள் எங்கே? நீதிபதி சரமாரி கேள்வி
Page 1 of 1
ரூ.66 கோடி சொத்து குவிப்புக்கு ஆதாரங்கள் எங்கே? நீதிபதி சரமாரி கேள்வி
சொத்து குவிப்பு வழக்கு இறுதி நிலையை அடைந்துள்ள நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ரூ.66 கோடி சொத்து குவிப்புக்கு ஆதாரங்கள் எங்கே என்று சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் தினமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று 33-வது நாள் விசாரணை தொடங்கியதும் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆதித்யசோதி, மொடோ அக்ரோ மற்றும் ரிவர்வே நிறுவனங்களின் சொத்து பட்டியலை தாக்கல் செய்ததுடன் தனது வாதத்தை நிறைவு செய்தார்.
இதையடுத்து இந்தோ தோகா உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உதய்ஹொல்லா, எங்கள் நிறுவனங்களில் ஜெயலலிதா முதலீடு எதுவும் செய்யவில்லை, நாங்கள் ஜெயலலிதாவின் பினாமிகளும் அல்ல.
நாங்கள் முறையாக வங்கியில் கடன் பெற்று நிறுவனங்களை தொடங்கினோம். அதற்குரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன.
எனவே, எங்கள் நிறுவனங்களின் சொத்துகளை முடக்கியது தவறானது என்றும் இந்த சொத்துகளை விடுவிக்க வேண்டும் எனவும் வாதிட்டதை தொடர்ந்து நிறுவனங்களின் இறுதி வாதம் நிறைவடைந்தது.
இதையடுத்து நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா மீது கூறப்பட்டுள்ள சட்டவிரோதமாக ரூ.66 கோடி சொத்து குவிப்பு குற்றச்சாட்டுக்கு உங்களிடம் ஆவணங்கள் இருக்கிறதா? என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு வாதத்தின்போது ஆவணங்களை தாக்கல் செய்வதாக அரசு வழக்கறிஞர் பதிலளித்தபோது குறுக்கிட்ட நீதிபதி, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதற்கு ஒவ்வொரு பைசாவுக்கும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆதாரங்கள் எங்கே? என்று கேட்டுள்ளார்.
அப்போது விசாரணை அதிகாரி சம்பந்தம், குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டுகள் குறித்து கூறப்பட்டுள்ளது என்றதற்கு, குற்றப்பத்திரிக்கையில் இருக்கும் தகவல்களை வைத்து முடிவு செய்ய முடியாது. அதற்கான ஆதாரங்களை நீங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு அரசு சிறப்பு வழக்கறிஞர், பவானிசிங் தனது இறுதி வாதத்தை தொடங்கினார். இந்த வழக்கில் முதல் விசாரணை அதிகாரி நல்லமநாயுடுவின் வாக்குமூலத்தை வாசித்தார்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பிய போது அரசு வழக்கறிஞர் அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக நின்றுள்ளார்.
மேலும், ஜெயலலிதா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் தினமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று 33-வது நாள் விசாரணை தொடங்கியதும் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆதித்யசோதி, மொடோ அக்ரோ மற்றும் ரிவர்வே நிறுவனங்களின் சொத்து பட்டியலை தாக்கல் செய்ததுடன் தனது வாதத்தை நிறைவு செய்தார்.
இதையடுத்து இந்தோ தோகா உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உதய்ஹொல்லா, எங்கள் நிறுவனங்களில் ஜெயலலிதா முதலீடு எதுவும் செய்யவில்லை, நாங்கள் ஜெயலலிதாவின் பினாமிகளும் அல்ல.
நாங்கள் முறையாக வங்கியில் கடன் பெற்று நிறுவனங்களை தொடங்கினோம். அதற்குரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன.
எனவே, எங்கள் நிறுவனங்களின் சொத்துகளை முடக்கியது தவறானது என்றும் இந்த சொத்துகளை விடுவிக்க வேண்டும் எனவும் வாதிட்டதை தொடர்ந்து நிறுவனங்களின் இறுதி வாதம் நிறைவடைந்தது.
இதையடுத்து நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா மீது கூறப்பட்டுள்ள சட்டவிரோதமாக ரூ.66 கோடி சொத்து குவிப்பு குற்றச்சாட்டுக்கு உங்களிடம் ஆவணங்கள் இருக்கிறதா? என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு வாதத்தின்போது ஆவணங்களை தாக்கல் செய்வதாக அரசு வழக்கறிஞர் பதிலளித்தபோது குறுக்கிட்ட நீதிபதி, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதற்கு ஒவ்வொரு பைசாவுக்கும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆதாரங்கள் எங்கே? என்று கேட்டுள்ளார்.
அப்போது விசாரணை அதிகாரி சம்பந்தம், குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டுகள் குறித்து கூறப்பட்டுள்ளது என்றதற்கு, குற்றப்பத்திரிக்கையில் இருக்கும் தகவல்களை வைத்து முடிவு செய்ய முடியாது. அதற்கான ஆதாரங்களை நீங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு அரசு சிறப்பு வழக்கறிஞர், பவானிசிங் தனது இறுதி வாதத்தை தொடங்கினார். இந்த வழக்கில் முதல் விசாரணை அதிகாரி நல்லமநாயுடுவின் வாக்குமூலத்தை வாசித்தார்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பிய போது அரசு வழக்கறிஞர் அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக நின்றுள்ளார்.
மேலும், ஜெயலலிதா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆதாரங்கள் இல்லையேல் ஜெயலலிதாவுக்கு நானே தீர்ப்பு வழங்குவேன்: நீதிபதி எச்சரிக்கை
» செம்மர கடத்தலில் ரூ.600 கோடி சொத்து சேர்த்த ராஜூபாய்: மும்பையில் அதிரடி கைது
» ஜெயலலிதா எத்தனை படங்கள் நடித்துள்ளார்...எவ்வளவு சம்பளம் வாங்கினார்? நீதிபதி கேள்வி
» செம்மர கடத்தலில் ரூ.600 கோடி சொத்து சேர்த்த ராஜூபாய்: மும்பையில் அதிரடி கைது
» ஜெயலலிதா எத்தனை படங்கள் நடித்துள்ளார்...எவ்வளவு சம்பளம் வாங்கினார்? நீதிபதி கேள்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum