Top posting users this month
No user |
Similar topics
செம்மரம் வெட்டச் சென்றவர்கள் எத்தனை பேர்? கணக்கெடுப்பு தொடங்கியது
Page 1 of 1
செம்மரம் வெட்டச் சென்றவர்கள் எத்தனை பேர்? கணக்கெடுப்பு தொடங்கியது
செம்மரம் வெட்டச் செல்லும் கூலித் தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்காடு மலைப்பகுதிகளில் உள்ள 64 கிராமங்களில் விவசாயம் மற்றும் காபி எஸ்டேட்டுகளிலும், கல்வராயன் மலைப்பகுதிகளிலும் பலர் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
ஆசை வார்த்தை கூறி இவர்களை அழைத்து செல்லும் புரோக்கர்கள், ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் வெட்ட அழைத்து செல்கின்றனர்.
இவ்வாறு செல்பவர்கள் வனத்துறையினரிடம் சிக்கும் போது பலியாகின்றனர், ஆனால் மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்து விட்டதாக கூறி அடக்கம் செய்யும் கொடூரமும் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவில் 20 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து செம்மரம் வெட்ட ஆந்திரா சென்ற கூலித் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பில் அந்தந்த மாவட்ட பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சேலம் எஸ்.பி., சுப்புலட்சுமி கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் செம்மரம் வெட்டுவதற்காக ஆந்திர மாநிலம் சென்று ஊர் திரும்பிய 46 பேர், சொந்த ஊரில் பாதுகாப்பாக உள்ளனர்.
மேலும், யார் யார் ஆந்திராவுக்கு சென்றுள்ளனர் என்பதை கண்டறியும் பணியில் மாவட்ட பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும், மரம் வெட்ட வெளியூர் சென்றவர்களின் விவரத்தை அவர்களது குடும்பத்தினர் பொலிஸாரிடம் புகார் அளிக்க முன்வருவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்காடு மலைப்பகுதிகளில் உள்ள 64 கிராமங்களில் விவசாயம் மற்றும் காபி எஸ்டேட்டுகளிலும், கல்வராயன் மலைப்பகுதிகளிலும் பலர் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
ஆசை வார்த்தை கூறி இவர்களை அழைத்து செல்லும் புரோக்கர்கள், ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் வெட்ட அழைத்து செல்கின்றனர்.
இவ்வாறு செல்பவர்கள் வனத்துறையினரிடம் சிக்கும் போது பலியாகின்றனர், ஆனால் மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்து விட்டதாக கூறி அடக்கம் செய்யும் கொடூரமும் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவில் 20 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து செம்மரம் வெட்ட ஆந்திரா சென்ற கூலித் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பில் அந்தந்த மாவட்ட பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சேலம் எஸ்.பி., சுப்புலட்சுமி கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் செம்மரம் வெட்டுவதற்காக ஆந்திர மாநிலம் சென்று ஊர் திரும்பிய 46 பேர், சொந்த ஊரில் பாதுகாப்பாக உள்ளனர்.
மேலும், யார் யார் ஆந்திராவுக்கு சென்றுள்ளனர் என்பதை கண்டறியும் பணியில் மாவட்ட பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும், மரம் வெட்ட வெளியூர் சென்றவர்களின் விவரத்தை அவர்களது குடும்பத்தினர் பொலிஸாரிடம் புகார் அளிக்க முன்வருவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பேருந்தில் சென்ற 74 தமிழர்கள்: செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்த ஆந்திர பொலிஸ்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இன்று வாக்குப் பதிவு: விறுவிறுப்பாக தொடங்கியது
» செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட 5 தமிழர்கள்: துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இன்று வாக்குப் பதிவு: விறுவிறுப்பாக தொடங்கியது
» செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்ட 5 தமிழர்கள்: துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum