Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பேருந்தில் சென்ற 74 தமிழர்கள்: செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்த ஆந்திர பொலிஸ்

Go down

பேருந்தில் சென்ற 74 தமிழர்கள்: செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்த ஆந்திர பொலிஸ் Empty பேருந்தில் சென்ற 74 தமிழர்கள்: செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்த ஆந்திர பொலிஸ்

Post by oviya Sat May 30, 2015 12:18 pm

ஆந்திராவில் பேருந்தில் சென்ற 74 தமிழர்களை செம்மரங்களை வெட்ட வந்ததாக கூறி ஆந்திர பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி வனப்பகுதியில் கடந்த மாதம், செம்மரம் கடத்தியதாக 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர மாநில செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு பொலிசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது இது தொடர்பான விசாரணைகள் நடந்துவருகின்றனர்.

இதைத்தொடர்ந்து செம்மர கடத்தலை தடுக்க ஆந்திர பொலிசார் செம்மரங்கள் இருக்கும் வனப்பகுதிக்குள் செல்பவர்களையும், வாகனங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சித்தூர் மாவட்டம் சின்னமஞ்சம் அருகே நேற்று ஆந்திர பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக ஒரு தனியார் பேருந்து சென்றுள்ளது.

அதனை சோதனையிட்ட போது, உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு தனியாக பேருந்து அமர்த்தி செல்வதாக கூறியபோதும் பொலிசார் சந்தேகமடைந்து அவர்கள் கொண்டு வந்த பைகளை திறந்து சோதனை நடத்தியுள்ளனர்.

அந்த பைகளில் மரம் வெட்டுவதற்கான கோடாரி, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அந்த 74 பேரையும் கைது செய்த பொலிசார், அவர்கள் வந்த பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், கைதான அனைவரும் தமிழகத்தின் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum