Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கச்சதீவை மீட்பதால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: அஜித் மேனன்

Go down

கச்சதீவை மீட்பதால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: அஜித் மேனன் Empty கச்சதீவை மீட்பதால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: அஜித் மேனன்

Post by oviya Tue Mar 10, 2015 1:19 pm

இலங்கை வசமுள்ள கச்சதீவை மீட்டுக்கொள்வதினால் ராமேஸ்வர மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என சென்னை மேம்பாட்டு கல்வி நிறுவனத்தின் இணை பேராசிரியர் அஜித் மேனன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது வளங்களை இழந்து வரும் கச்சதீவை மீட்பதினால் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமான மீன்கள் கிடைக்காது எனவும்,

ஏனெனில் இந்திய மீனவர்கள் சில நேரங்களில் இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்பில் தமது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கச்சதீவை மீட்பதால் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது என மீனவர்களுக்கே தெரியும், மேலும் கச்சதீவை மீட்பதால் மீனவர்களின் 20 வீத பிரச்சினைகளுக்கு மாத்திரமே தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு இந்திய விசை படகு மீனவர்கள் இலங்கை பகுதியில் மீன்பிடிப்பதை தடுக்கும் வகையிலான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என இலங்கை வடபகுதி மீனவர்கள் இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் போட்டி அரசியல் நடைபெறுவதால் மீனவர்களின் வாக்குகளை பெற்று கொள்ளும் நோக்கில் இலங்கை மீனவர்களுக்கு சாதகமாகவே அந்நாட்டு அரசாங்கம் தீர்வு வழங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்திய மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum