Top posting users this month
No user |
Similar topics
கச்சதீவை மீட்பதால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: அஜித் மேனன்
Page 1 of 1
கச்சதீவை மீட்பதால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: அஜித் மேனன்
இலங்கை வசமுள்ள கச்சதீவை மீட்டுக்கொள்வதினால் ராமேஸ்வர மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என சென்னை மேம்பாட்டு கல்வி நிறுவனத்தின் இணை பேராசிரியர் அஜித் மேனன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது வளங்களை இழந்து வரும் கச்சதீவை மீட்பதினால் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமான மீன்கள் கிடைக்காது எனவும்,
ஏனெனில் இந்திய மீனவர்கள் சில நேரங்களில் இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்பில் தமது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவை மீட்பதால் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது என மீனவர்களுக்கே தெரியும், மேலும் கச்சதீவை மீட்பதால் மீனவர்களின் 20 வீத பிரச்சினைகளுக்கு மாத்திரமே தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு இந்திய விசை படகு மீனவர்கள் இலங்கை பகுதியில் மீன்பிடிப்பதை தடுக்கும் வகையிலான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என இலங்கை வடபகுதி மீனவர்கள் இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் போட்டி அரசியல் நடைபெறுவதால் மீனவர்களின் வாக்குகளை பெற்று கொள்ளும் நோக்கில் இலங்கை மீனவர்களுக்கு சாதகமாகவே அந்நாட்டு அரசாங்கம் தீர்வு வழங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்திய மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது வளங்களை இழந்து வரும் கச்சதீவை மீட்பதினால் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமான மீன்கள் கிடைக்காது எனவும்,
ஏனெனில் இந்திய மீனவர்கள் சில நேரங்களில் இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்பில் தமது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவை மீட்பதால் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது என மீனவர்களுக்கே தெரியும், மேலும் கச்சதீவை மீட்பதால் மீனவர்களின் 20 வீத பிரச்சினைகளுக்கு மாத்திரமே தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு இந்திய விசை படகு மீனவர்கள் இலங்கை பகுதியில் மீன்பிடிப்பதை தடுக்கும் வகையிலான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என இலங்கை வடபகுதி மீனவர்கள் இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் போட்டி அரசியல் நடைபெறுவதால் மீனவர்களின் வாக்குகளை பெற்று கொள்ளும் நோக்கில் இலங்கை மீனவர்களுக்கு சாதகமாகவே அந்நாட்டு அரசாங்கம் தீர்வு வழங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்திய மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முயற்சி: இந்திய மத்திய அரசாங்கம்
» கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிடின் நாட்டில் பாரிய பிரச்சினை உருவெடுக்கும் - ஆனந்தசங்கரி
» கச்சதீவை மீளப்பெற இந்திய மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும்: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்
» கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிடின் நாட்டில் பாரிய பிரச்சினை உருவெடுக்கும் - ஆனந்தசங்கரி
» கச்சதீவை மீளப்பெற இந்திய மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும்: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum