Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரசாங்கத்துக்கும், நாடாளுமன்றிற்கும் ஆலோசனை வழங்க ராஜ்யசபை

Go down

அரசாங்கத்துக்கும், நாடாளுமன்றிற்கும் ஆலோசனை வழங்க ராஜ்யசபை Empty அரசாங்கத்துக்கும், நாடாளுமன்றிற்கும் ஆலோசனை வழங்க ராஜ்யசபை

Post by oviya Sat Mar 07, 2015 11:58 am

அரசாங்கத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஆலோசனை வழங்குவதற்கான ராஜ்யசபை ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
சேதுவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் கீழ் ராஜ்யசபையை உருவாக்குவது தொடர்பிலான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

19வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகள் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், பொது தேர்தலின் பின்னர் ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையிலேயே செயற்படுவார் எனவும்,

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தல், நீதி, ஜனநாயகத்தை நிலைநாட்டுதல், உள்ளிட்டவைகளை ஜனாதிபதியே மேற்கொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி நினைக்கும் நேரத்தில் அமைச்சரவையை ஒன்றுகூட்டுவதற்கான அதிகாரம் உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஆலோசனை வழங்குவதற்கான ராஜ்யசபையை அமைத்தல் புதிய யோசனை என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாட்டில் காணப்படும் விருப்பு வாக்கு தெரிவு முறையை இரத்து செய்து தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைகளை இணைத்து புதிய தேர்தல் முறைமை உருவாக்கப்படவுள்ளது.

இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பல யோசனைகளை முன்வைத்துள்ளார் எனவும், எதிர்வரும் 10ம் திகதி அவருடன் விசேட சந்திப்பொன்றும் இடம்பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum