Top posting users this month
No user |
100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் தேசிய ஆலோசனை சபைக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது
Page 1 of 1
100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் தேசிய ஆலோசனை சபைக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் தாமதமாகிய தேசிய ஆலோசனை சபையின் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்போது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இந்த சபையில் மேற்கொள்ளப்படும் அரசியல் அமைப்பு திருத்தங்கள் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்தநிலையில் சபைக்கூட்டத்தின்போது தேசிய மருந்தாக்கல் கொள்கை, ஊழல்களில் ஈடுபட்டோரை சட்டத்துக்கு முன் கொண்டு வருதல், அதிகாரம் மிக்க கணக்காய்வு சபை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இந்த சபைக்கூட்டம் கடந்த 12ஆம் திகதி இடம்பெறவிருந்தபோதும் புதிய அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமையால் அது தாமதிக்கப்பட்டது.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பொறுப்பை நடைமுறை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இணங்கியமையை அடுத்து நாடாளுமன்ற பெரும்பான்மை பிரச்சினை தீர்க்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்றைய கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திஸாநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்போது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இந்த சபையில் மேற்கொள்ளப்படும் அரசியல் அமைப்பு திருத்தங்கள் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்தநிலையில் சபைக்கூட்டத்தின்போது தேசிய மருந்தாக்கல் கொள்கை, ஊழல்களில் ஈடுபட்டோரை சட்டத்துக்கு முன் கொண்டு வருதல், அதிகாரம் மிக்க கணக்காய்வு சபை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இந்த சபைக்கூட்டம் கடந்த 12ஆம் திகதி இடம்பெறவிருந்தபோதும் புதிய அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமையால் அது தாமதிக்கப்பட்டது.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பொறுப்பை நடைமுறை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இணங்கியமையை அடுத்து நாடாளுமன்ற பெரும்பான்மை பிரச்சினை தீர்க்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்றைய கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திஸாநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum