Top posting users this month
No user |
Similar topics
நேதாஜி உயிரோடு தான் இருக்கிறாரா? நீடிக்கும் குழப்பம்
Page 1 of 1
நேதாஜி உயிரோடு தான் இருக்கிறாரா? நீடிக்கும் குழப்பம்
இந்தியாவின் இராணுவப்படையை உருவாக்கிய நேதாஜியின் மரணம் குறித்து, தற்போது வரை குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
இந்திய சுதந்திர போராட்டத்தின்போது இந்தியாவில் இருந்து வெளியேறிய நேதாஜி, ஜேர்மனி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்துபோராடினார்.
இந்தியாவுக்கு வெளியே மூன்று லட்சம் பேரைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியதோடு அதை வழிநடத்தியவர் நேதாஜி.
இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவத்திடம் ஜப்பான் சரணடைந்தது.
அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ. தலைமையகமான ‘கதே மாளிகை’யில் இருந்த நேதாஜியை அங்கிருந்து வெளியேறிவிடும்படி ஜப்பான் அதிபர் டோஜோ தகவல் அனுப்புகிறார்.
இதையடுத்து தன்னுடைய உதவியாளர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் ஜப்பான் தளபதிகள் உள்ளிட்ட ஒன்பது பேருடன் தனி விமானம் மூலம் சிங்கப்பூரை விட்டுப் செல்கிறார் நேதாஜி.
வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக ஜப்பான் எல்லைக்குள் மஞ்சூரியா என்ற இடத்தில் அந்த விமானம் தரையிறக்கப்படுகிறது.
இதுவரை நடந்த விடயங்கள் தெளிவாக உள்ள நிலையில், அதன் பிறகு என்ன நடந்தது என்பது இதுவரை புரியாத மர்மமாகவே நிலவுகிறது.
1945 ஆகஸ்ட் 22ல் ஜப்பான் வானொலியில், நேதாஜி பயணம் செய்த விமானம் மதியம் மஞ்சூரியாவை விட்டுப் புறப்படும்போது, விபத்துக்கு உள்ளானதில் நேதாஜி உள்ளிட்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்றும், அவரது உதவியாளர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் காயங்களுடன் உயிர்தப்பினார்கள் எனவும் செய்தி பரவியது.
இதற்கு முன்பும் பலமுறை அவர் விமான விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டிருப்பதால், நேதாஜி அபிமானிகள் இந்தச் செய்தியை நம்பவில்லை.
அப்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கும் நேதாஜிக்கும் நெருக்கம் அதிகமாக இருந்த காலம் என்பதால், நேதாஜி இறந்துவிட்டதாகச் செய்தி வந்தபோது, அரசியல் கைதியாக இருந்த பசும்பொன், விமான விபத்து ஏதும் நடக்கவில்லை என்றும் இது திட்டமிட்ட நாடகம் எனவும் அறிக்கை வெளியிட்டார்.
பின்னர் 1951-ல் நடந்த நேதாஜி பிறந்த நாள் விழாவில் பேசிய பசும்பொன், நேதாஜி உயிருடன் இருக்கிறார். அவரை நான் சந்தித்துவிட்டு வந்தேன் என்று அறிவித்தார்.
இதையடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து, பர்மா சென்று திரும்பும் வழியில் கொல்கத்தாவில் பேசிய பசும்பொன், நம் நேதாஜி இறக்கவில்லை. இந்தியா, சீனா, பர்மா ஆகிய மூன்று நாட்டு எல்லைகளும் சந்திக்கும் இடத்தில் முகாம் அமைத்துத் தங்கியிருக்கிறார்.
அங்கே ‘ஆசிய சுதந்திர சேனா’அமைத்து, போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார். விரைவில் அவர் இந்தியாவில் ராணுவ ரீதியிலான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்.
இவை அனைத்தும் பிரதமர் நேருவுக்கும் அவரது சகோதரியும் ரஷ்யாவுக்கான இந்தியத் தூதருமான விஜயலட்சுமி பண்டிட்டுக்கும் தெரியும்.
உண்மையிலேயே இவர்களுக்கு நல்லெண்ணம் இருக்குமானால், நேதாஜி மர்மம்குறித்து விசாரணை ஆணையம் அமைக்கட்டும் என்று பேட்டி கொடுத்தார்.
இதை அடுத்து 1956-ல், ஐ.என்.ஏ-யில் லெஃப்டினென்டாக இருந்த ஷாநவாஸ் கான் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார் நேரு.
ஓராண்டுக்குள் விசாரணையை முடித்த ஷாநவாஸ் கான், நேதாஜி விமான விபத்தில் இறந்துவிட்டதாக 1957-ல் அறிக்கை சமர்ப்பித்தார்.
ஆனால், விபத்து நடந்ததாகச் சொல்லப்படும் மஞ்சூரியாவுக்கே போகாமல், அறைக்குள் உட்கார்ந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை ஏற்க முடியாது என ஃபார்வர்டு பிளாக் மட்டுமல்லாமல், காங்கிரஸில் இருந்த நேதாஜி அபிமானிகளுமே கேலிசெய்தார்கள்.
இந்திய சுதந்திர போராட்டத்தின்போது இந்தியாவில் இருந்து வெளியேறிய நேதாஜி, ஜேர்மனி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்துபோராடினார்.
இந்தியாவுக்கு வெளியே மூன்று லட்சம் பேரைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியதோடு அதை வழிநடத்தியவர் நேதாஜி.
இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவத்திடம் ஜப்பான் சரணடைந்தது.
அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ. தலைமையகமான ‘கதே மாளிகை’யில் இருந்த நேதாஜியை அங்கிருந்து வெளியேறிவிடும்படி ஜப்பான் அதிபர் டோஜோ தகவல் அனுப்புகிறார்.
இதையடுத்து தன்னுடைய உதவியாளர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் ஜப்பான் தளபதிகள் உள்ளிட்ட ஒன்பது பேருடன் தனி விமானம் மூலம் சிங்கப்பூரை விட்டுப் செல்கிறார் நேதாஜி.
வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக ஜப்பான் எல்லைக்குள் மஞ்சூரியா என்ற இடத்தில் அந்த விமானம் தரையிறக்கப்படுகிறது.
இதுவரை நடந்த விடயங்கள் தெளிவாக உள்ள நிலையில், அதன் பிறகு என்ன நடந்தது என்பது இதுவரை புரியாத மர்மமாகவே நிலவுகிறது.
1945 ஆகஸ்ட் 22ல் ஜப்பான் வானொலியில், நேதாஜி பயணம் செய்த விமானம் மதியம் மஞ்சூரியாவை விட்டுப் புறப்படும்போது, விபத்துக்கு உள்ளானதில் நேதாஜி உள்ளிட்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்றும், அவரது உதவியாளர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் காயங்களுடன் உயிர்தப்பினார்கள் எனவும் செய்தி பரவியது.
இதற்கு முன்பும் பலமுறை அவர் விமான விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டிருப்பதால், நேதாஜி அபிமானிகள் இந்தச் செய்தியை நம்பவில்லை.
அப்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கும் நேதாஜிக்கும் நெருக்கம் அதிகமாக இருந்த காலம் என்பதால், நேதாஜி இறந்துவிட்டதாகச் செய்தி வந்தபோது, அரசியல் கைதியாக இருந்த பசும்பொன், விமான விபத்து ஏதும் நடக்கவில்லை என்றும் இது திட்டமிட்ட நாடகம் எனவும் அறிக்கை வெளியிட்டார்.
பின்னர் 1951-ல் நடந்த நேதாஜி பிறந்த நாள் விழாவில் பேசிய பசும்பொன், நேதாஜி உயிருடன் இருக்கிறார். அவரை நான் சந்தித்துவிட்டு வந்தேன் என்று அறிவித்தார்.
இதையடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து, பர்மா சென்று திரும்பும் வழியில் கொல்கத்தாவில் பேசிய பசும்பொன், நம் நேதாஜி இறக்கவில்லை. இந்தியா, சீனா, பர்மா ஆகிய மூன்று நாட்டு எல்லைகளும் சந்திக்கும் இடத்தில் முகாம் அமைத்துத் தங்கியிருக்கிறார்.
அங்கே ‘ஆசிய சுதந்திர சேனா’அமைத்து, போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார். விரைவில் அவர் இந்தியாவில் ராணுவ ரீதியிலான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்.
இவை அனைத்தும் பிரதமர் நேருவுக்கும் அவரது சகோதரியும் ரஷ்யாவுக்கான இந்தியத் தூதருமான விஜயலட்சுமி பண்டிட்டுக்கும் தெரியும்.
உண்மையிலேயே இவர்களுக்கு நல்லெண்ணம் இருக்குமானால், நேதாஜி மர்மம்குறித்து விசாரணை ஆணையம் அமைக்கட்டும் என்று பேட்டி கொடுத்தார்.
இதை அடுத்து 1956-ல், ஐ.என்.ஏ-யில் லெஃப்டினென்டாக இருந்த ஷாநவாஸ் கான் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார் நேரு.
ஓராண்டுக்குள் விசாரணையை முடித்த ஷாநவாஸ் கான், நேதாஜி விமான விபத்தில் இறந்துவிட்டதாக 1957-ல் அறிக்கை சமர்ப்பித்தார்.
ஆனால், விபத்து நடந்ததாகச் சொல்லப்படும் மஞ்சூரியாவுக்கே போகாமல், அறைக்குள் உட்கார்ந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை ஏற்க முடியாது என ஃபார்வர்டு பிளாக் மட்டுமல்லாமல், காங்கிரஸில் இருந்த நேதாஜி அபிமானிகளுமே கேலிசெய்தார்கள்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜோத்பூரை பீதியில் உறைய வைத்த சத்தம்: விடை தெரியாமல் நீடிக்கும் மர்மம்
» கடிதத்தில் மறைக்கப்பட்ட 2 பக்கங்கள்! விஷ்ணுபிரியா தற்கொலையில் நீடிக்கும் மர்மம்
» மறக்கப்பட்ட நாயகன் நேதாஜி
» கடிதத்தில் மறைக்கப்பட்ட 2 பக்கங்கள்! விஷ்ணுபிரியா தற்கொலையில் நீடிக்கும் மர்மம்
» மறக்கப்பட்ட நாயகன் நேதாஜி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum