Top posting users this month
No user |
கடிதத்தில் மறைக்கப்பட்ட 2 பக்கங்கள்! விஷ்ணுபிரியா தற்கொலையில் நீடிக்கும் மர்மம்
Page 1 of 1
கடிதத்தில் மறைக்கப்பட்ட 2 பக்கங்கள்! விஷ்ணுபிரியா தற்கொலையில் நீடிக்கும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா எழுதிய கடிதத்தின் மறைக்கப்பட்ட 2 பக்கங்கள் நேற்று வெளியானது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா, கடந்த மாதம் 18ம் திகதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து 9 பக்க கடிதம் ஒன்றை கைப்பற்றி இருப்பதாக கூறி, சேலத்தில் பொலிசார் அந்த 9 பக்க கடிதத்தையும் ஏற்கனவே வெளியிட்டனர்.
அப்போதே அரசியல் கட்சியினரும், விஷ்ணுபிரியாவின் உறவினர்களும் அந்த கடிதத்தில் மேலும் சில பக்கங்கள் இருப்பதாகவும், அதை பொலிசார் வெளியிடவில்லை என்றும் குற்றச்சாட்டை எழுப்பினர்.
இந்நிலையில் விஷ்ணுபிரியா எழுதிய கடிதத்தின் மேலும் 2 பக்கங்கள் நேற்று வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாவது, என்னுடைய தற்கொலை வீடியோ எனது சிறிய கணினி (டேப்லெட்) இருக்கும். அதை பாருங்கள்.
நான் இறந்த பிறகு என் சிறிய கணினியை மகேஸ் அக்காவிடம் கொடுத்துவிடுங்கள். கீதாஞ்சலிருக்கு ரூ.4 ஆயிரம் கொடுங்கள். திவ்யாவுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிவிடுங்கள்.
பத்திரிக்கையாளர்கள், பொலிசாருக்கு எனது வேண்டுகோள். என்னை அமைதியாக சாகவிடுங்கள். எனது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம்.
நான் கத்தியால் அறுக்கப்படுவதை வெறுக்கிறேன். நான் என் வாழ்க்கையில் பல பிரேத பரிசோதனைகளை பார்த்து உள்ளேன்.
அதனால்தான் எனக்கு அது நடக்கக்கூடாது என விரும்புகிறேன். எனது தற்கொலை தொடர்பாக உங்களுடைய அனைத்து வித சந்தேகங்களும் வீடியோ கேசட்டில் தெளிவாக்கப்படும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது. கடிதத்தின் கீழ் விஷ்ணுபிரியா என்று கையெழுத்தும் போடப்பட்டு இருந்தது.
மேலும் அந்த கடிதத்தில் அம்மாவுக்கு என்று குறிப்பிட்டு ஏ.டி.எம் கார்டு ரகசிய எண், சிறிய மடிக்கணினி ரகசிய எண், செல்போன் எண் உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் அந்த கடிதத்தில் 15-7-15 என்று திகதி குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனால் அந்த கடிதத்தை விஷ்ணுபிரியா முன்பே எழுதி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து விஷ்ணுபிரியா எழுதிய கடிதம், மடிக்கணனி மற்றும் செல்போனை கைப்பற்றிய பொலிசார் சென்னை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர்.
இதன்முடிவுகள் வந்த பின்னரே உண்மை தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா, கடந்த மாதம் 18ம் திகதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து 9 பக்க கடிதம் ஒன்றை கைப்பற்றி இருப்பதாக கூறி, சேலத்தில் பொலிசார் அந்த 9 பக்க கடிதத்தையும் ஏற்கனவே வெளியிட்டனர்.
அப்போதே அரசியல் கட்சியினரும், விஷ்ணுபிரியாவின் உறவினர்களும் அந்த கடிதத்தில் மேலும் சில பக்கங்கள் இருப்பதாகவும், அதை பொலிசார் வெளியிடவில்லை என்றும் குற்றச்சாட்டை எழுப்பினர்.
இந்நிலையில் விஷ்ணுபிரியா எழுதிய கடிதத்தின் மேலும் 2 பக்கங்கள் நேற்று வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாவது, என்னுடைய தற்கொலை வீடியோ எனது சிறிய கணினி (டேப்லெட்) இருக்கும். அதை பாருங்கள்.
நான் இறந்த பிறகு என் சிறிய கணினியை மகேஸ் அக்காவிடம் கொடுத்துவிடுங்கள். கீதாஞ்சலிருக்கு ரூ.4 ஆயிரம் கொடுங்கள். திவ்யாவுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிவிடுங்கள்.
பத்திரிக்கையாளர்கள், பொலிசாருக்கு எனது வேண்டுகோள். என்னை அமைதியாக சாகவிடுங்கள். எனது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம்.
நான் கத்தியால் அறுக்கப்படுவதை வெறுக்கிறேன். நான் என் வாழ்க்கையில் பல பிரேத பரிசோதனைகளை பார்த்து உள்ளேன்.
அதனால்தான் எனக்கு அது நடக்கக்கூடாது என விரும்புகிறேன். எனது தற்கொலை தொடர்பாக உங்களுடைய அனைத்து வித சந்தேகங்களும் வீடியோ கேசட்டில் தெளிவாக்கப்படும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது. கடிதத்தின் கீழ் விஷ்ணுபிரியா என்று கையெழுத்தும் போடப்பட்டு இருந்தது.
மேலும் அந்த கடிதத்தில் அம்மாவுக்கு என்று குறிப்பிட்டு ஏ.டி.எம் கார்டு ரகசிய எண், சிறிய மடிக்கணினி ரகசிய எண், செல்போன் எண் உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் அந்த கடிதத்தில் 15-7-15 என்று திகதி குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனால் அந்த கடிதத்தை விஷ்ணுபிரியா முன்பே எழுதி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து விஷ்ணுபிரியா எழுதிய கடிதம், மடிக்கணனி மற்றும் செல்போனை கைப்பற்றிய பொலிசார் சென்னை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர்.
இதன்முடிவுகள் வந்த பின்னரே உண்மை தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum