Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


யாழ். சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

Go down

யாழ். சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்! Empty யாழ். சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

Post by oviya Fri Feb 20, 2015 1:19 pm

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சமூக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி கடந்த 3 தினங்களாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வரும் நிலையில் இன்றைய தினம் ஆளுநர் செயலகத்தின் முன்பாக குறித்த தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த தொண்டர்கள் 5 வருடம் தொடக்கம் 15 வருடங்கள் கடமையாற்றியிருக்கின்ற போதும் அவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படாத நிலையில் வறுமையுடன் வெறும் 6 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு சேவையாற்றி வருகின்றனர். குறித்த 6 ஆயிரம் ரூபா சம்பளமும் கடந்த வருட இறுதியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறும், தமது சம்பளத்தை அதிகரிக்குமாறும் கோரி கடந்த 3 தினங்களாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக குறித்த தொண்டர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றைய தினம் அவர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆளுநருக்கு மகஜர் ஒன்றிணையும் கையளித்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்த தெரிவிக்கையில், 5 வருடங்கள் தொடக்கம் 15 வருடங்கள் வரையில் தாம் 12 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் கீழ் பணியாற்றிய போதும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும். தமது சம்பளம் கடந்த வருடம் ஐப்பசி மாதம் தொடக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தாம் வறுமையில் வாடுவதாகவும், தமது சம்பளத்தை அதிகரித்துக் கொடுப்பதுடைன் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum