Top posting users this month
No user |
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்: 14 தினங்களில் தீர்வு வழங்குவதாக உறுதிமொழி
Page 1 of 1
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்: 14 தினங்களில் தீர்வு வழங்குவதாக உறுதிமொழி
தமது தொழிலை நிரந்தரமாக்குமாறு கோரி அரச திணைக்களங்களில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 14 நாட்களில் தீர்வு காணப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து .போராட்டம் கைவிடப்பட்டுள்ளது
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
மைத்திரி அரசாங்கத்தின் 100 நாள் வேலை திட்டத்ததில் வாக்குறுதி வழங்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துமாறும், அவர்களுக்கு இலவச மோட்டார் சைக்கிள்களை வழங்குங்கள் எனவும் வலியுறுத்தியே தொழில் பெற்ற பட்டதாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது.
மேலும் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பட்டதாரிகள் எவ்வித பதவியுயர்வுமின்றி காணப்படுவதாகவும்,
2013ம் ஆண்டு நடைபெற்ற போட்டி பரீட்சையில் சித்தியடையாத தொழில் புரியும் பட்டதாரிகளை நீக்குவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறையை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூர்த்தி அதிகார சபையில் 16 ஆயிரம் பட்டதாரிகள் சாதாரண பதவியில் உள்ளனர், அவர்களுக்கு கௌரவமிக்க பதவிகள் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் மனுவொன்றை கையளிக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த சங்கத்தின் பொது செயலாளர் சந்தன சூரியராச்சி உள்ளிட்ட ஐவர் மாத்திரம் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
மைத்திரி அரசாங்கத்தின் 100 நாள் வேலை திட்டத்ததில் வாக்குறுதி வழங்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துமாறும், அவர்களுக்கு இலவச மோட்டார் சைக்கிள்களை வழங்குங்கள் எனவும் வலியுறுத்தியே தொழில் பெற்ற பட்டதாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது.
மேலும் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பட்டதாரிகள் எவ்வித பதவியுயர்வுமின்றி காணப்படுவதாகவும்,
2013ம் ஆண்டு நடைபெற்ற போட்டி பரீட்சையில் சித்தியடையாத தொழில் புரியும் பட்டதாரிகளை நீக்குவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறையை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூர்த்தி அதிகார சபையில் 16 ஆயிரம் பட்டதாரிகள் சாதாரண பதவியில் உள்ளனர், அவர்களுக்கு கௌரவமிக்க பதவிகள் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் மனுவொன்றை கையளிக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த சங்கத்தின் பொது செயலாளர் சந்தன சூரியராச்சி உள்ளிட்ட ஐவர் மாத்திரம் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum