Top posting users this month
No user |
Similar topics
ஸ்ரீலங்கன் விமான சேவையில் மோசடி! - ஆராய குழு நியமனம்
Page 1 of 1
ஸ்ரீலங்கன் விமான சேவையில் மோசடி! - ஆராய குழு நியமனம்
ஸ்ரீலங்கன் விமான சேவையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள், மற்றும் முறையற்ற செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு நால்வரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி ஜே.சி வெலி அமுன தலைமையில் இக்குழு செயற்படவுள்ளதுடன், யூ.எச் பலிஹக்கார, பி.ஏ.டபிள்யூ அபேவர்த்தன, எம்.கே பண்டார ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பணிப்பாளர் குழு மற்றும் நிர்வாகம் ஆகியன, அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளமை தொடர்பிலும்,
விமானங்களை தவணைக் கொடுப்பனவில் பெற்றுக்கொள்ளல், மற்றும் கொள்வனவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் இக்குழு ஆராயவுள்ளது.
25 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களின் கொள்வனவு மற்றும் சேவைகள் தொடர்பான நடவடிக்கைகள், நிர்வாக சேவைகளை முன்னெடுப்பதில் உள்ள தடங்கல்கள் குறித்தும், இக்குழுவினால் ஆதாரங்கள் திரட்டப்படவுள்ளன.
அத்துடன் எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைகளை நிறைவுசெய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி ஜே.சி வெலி அமுன தலைமையில் இக்குழு செயற்படவுள்ளதுடன், யூ.எச் பலிஹக்கார, பி.ஏ.டபிள்யூ அபேவர்த்தன, எம்.கே பண்டார ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பணிப்பாளர் குழு மற்றும் நிர்வாகம் ஆகியன, அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளமை தொடர்பிலும்,
விமானங்களை தவணைக் கொடுப்பனவில் பெற்றுக்கொள்ளல், மற்றும் கொள்வனவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் இக்குழு ஆராயவுள்ளது.
25 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களின் கொள்வனவு மற்றும் சேவைகள் தொடர்பான நடவடிக்கைகள், நிர்வாக சேவைகளை முன்னெடுப்பதில் உள்ள தடங்கல்கள் குறித்தும், இக்குழுவினால் ஆதாரங்கள் திரட்டப்படவுள்ளன.
அத்துடன் எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைகளை நிறைவுசெய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்ரீலங்கன் விமான சேவை மோசடி: முன்னாள் தலைவர் விளக்கம்
» அரச காணிகள் மோசடி: ஆராய ஆணைக்குழு நியமனம்
» ஸ்ரீலங்கன் விமான சேவை டுபாய் வங்கியில் அடகு
» அரச காணிகள் மோசடி: ஆராய ஆணைக்குழு நியமனம்
» ஸ்ரீலங்கன் விமான சேவை டுபாய் வங்கியில் அடகு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum