Top posting users this month
No user |
ஏ 5 வீதியை புனரமைக்க அரசு நடவடிக்கை- அதிவேக நெடுஞ்சாலை மோசடி குறித்து ஆராய விசேட குழு
Page 1 of 1
ஏ 5 வீதியை புனரமைக்க அரசு நடவடிக்கை- அதிவேக நெடுஞ்சாலை மோசடி குறித்து ஆராய விசேட குழு
பதுளை முதல் செங்கலடி வரையிலான ஏ 5 வீதி நுழைவாயிலின் புனர் நிர்மாணப் பணியை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கிழக்கு மாகாணத்திலிருந்து மத்திய மாகாணம் வரையிலான புவியியல் வலையத்தின் பாரிய நெடுஞ்சாலை இணைப்பு பகுதிகளில் ஒன்றாக பேராதனை – பதுளை – செங்கலடி ஆகியவை இனங்காணப்பட்டுள்ளன.
இதன்படி இவ்விரண்டினையும் இணைக்கும் 151.3 கி.மீ நீளத்தைக் கொண்ட பதுளை முதல் செங்கலடி வரையிலான எஞ்சிய பகுதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இந்த புனர்நிர்மாண பணிகளுக்காக ஒபெக் அமைப்பு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதுடன்,
மேலும் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக் கொள்வதற்காக அபிவிருத்திக்கான சவூதி நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை அரசாங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.
இந்நிலையிலேயே பதுளை - செங்கலடிக்கிடையிலான பகுதியை 120 மில்லியன் அமெரிக்க டொலர்களில் புனரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை மோசடி குறித்து ஆராய விசேட குழு
கடந்த அரசாங்கத்தின் போது நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக, விசேட விசாரணை பிரிவொன்றினை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2011 முதல் 15ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
நெடுஞ்சாலை துறையில் கடந்த காலத்தில் பெருமளவு முதலீடுகள் இடம்பெற்றுள்ளதோடு நிர்வாக தொழில்நுட்ப நிதி மற்றும் இதர விடயங்களில் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்தல் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களை இனங்காண்தல் தொடர்பிலேயே இக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
கிழக்கு மாகாணத்திலிருந்து மத்திய மாகாணம் வரையிலான புவியியல் வலையத்தின் பாரிய நெடுஞ்சாலை இணைப்பு பகுதிகளில் ஒன்றாக பேராதனை – பதுளை – செங்கலடி ஆகியவை இனங்காணப்பட்டுள்ளன.
இதன்படி இவ்விரண்டினையும் இணைக்கும் 151.3 கி.மீ நீளத்தைக் கொண்ட பதுளை முதல் செங்கலடி வரையிலான எஞ்சிய பகுதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இந்த புனர்நிர்மாண பணிகளுக்காக ஒபெக் அமைப்பு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதுடன்,
மேலும் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக் கொள்வதற்காக அபிவிருத்திக்கான சவூதி நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை அரசாங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.
இந்நிலையிலேயே பதுளை - செங்கலடிக்கிடையிலான பகுதியை 120 மில்லியன் அமெரிக்க டொலர்களில் புனரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை மோசடி குறித்து ஆராய விசேட குழு
கடந்த அரசாங்கத்தின் போது நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக, விசேட விசாரணை பிரிவொன்றினை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2011 முதல் 15ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
நெடுஞ்சாலை துறையில் கடந்த காலத்தில் பெருமளவு முதலீடுகள் இடம்பெற்றுள்ளதோடு நிர்வாக தொழில்நுட்ப நிதி மற்றும் இதர விடயங்களில் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்தல் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களை இனங்காண்தல் தொடர்பிலேயே இக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum