Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுனந்தாவுடன் தங்கியிருந்த நபர்…. மதியம் முதல் அதிகாலை வரை நடந்த சண்டை: திடுக்கிடும் தகவல்கள்

Go down

முதல் - சுனந்தாவுடன் தங்கியிருந்த நபர்…. மதியம் முதல் அதிகாலை வரை நடந்த சண்டை: திடுக்கிடும் தகவல்கள் Empty சுனந்தாவுடன் தங்கியிருந்த நபர்…. மதியம் முதல் அதிகாலை வரை நடந்த சண்டை: திடுக்கிடும் தகவல்கள்

Post by oviya Sat Jan 10, 2015 12:57 pm

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசிதரூரின் மூன்றாவது மனைவி சுனந்தா கடந்த ஆண்டு ஜனவரி 17ம் திகதி மர்மமான முறையில் இறந்தார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் சமீபத்தில் உறுதியானது.

இந்த விவகாரத்தை விசாரித்து வரும் டெல்லி பொலிசாரிடம், சசி தரூரின் வேலைக்காரரான நாராயண் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல புதிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

கடந்த 2010 அக்டோபர் முதல் சசிதரூர் வீட்டில் வேலை பார்க்கிறேன். கடந்த ஓராண்டாக இருவரும் பயங்கரமாக சண்டையிடுவது வழக்கம்.

சுனந்தா இறந்ததாக கூறப்படும் 2014 ஜனவரி 17ம் திகதிக்கு, இரு நாட்களுக்கு முன்னதாக டெல்லி லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருந்தார்.

அவருடன், சுனில் என்ற நபர் நீண்ட நேரம் தங்கி இருந்தார். அவர்களுடன் சுனந்தாவின் நண்பர்கள் சிலரும் வந்து சென்றனர்.

அந்த நேரத்தில் சசிதரூர் டெல்லியில் தான் இருந்தார். எனினும் இருவரும் ஒன்றாக தங்கவில்லை. அடிக்கடி போனில் சண்டையிட்டுக் கொண்டனர்.

சசிதரூருக்கு போன் செய்த சுனந்தா, சுனில் எல்லாவற்றையும் முடித்து விட்டார் என கூறினார்.

சசிதரூரின் மொபைல் போனில் இருந்த தகவல்கள், அவர் யாருக்கு போன் செய்தார், செய்தி அளித்தார் போன்ற விவரங்களை சுனந்தாவுக்கு, சுனில் காப்பி செய்து கொடுத்திருக்கலாம்.

ஜனவரி 17ம் திகதி காலை சசிதரூர் எனக்கு போன் செய்தார். சுனந்தாவுக்கு உடல் நலம் சரியில்லை, சரியாக சாப்பிடவில்லை. அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறாள் அவளை எழுப்பு என கூறினார்.

அதன்படி படுக்கையறையில் கிடந்த சுனந்தாவை நான் எழுப்பினேன், அவர் எழுந்திருக்கவில்லை. மருத்துவரை அழைத்து வந்து பார்த்த போது இறந்து விட்டதாக கூறினார்.

இதற்கு முன் இருவரும் பல முறை பயங்கரமாக சண்டையிட்டனர். துபாயில் ஒருநாள் மதியம் தொடங்கிய சண்டை அதிகாலை 4:00 மணி வரை தொடர்ந்தது. அப்போது சுனந்தா தாக்கியதில் சசிதரூரின் காலில் காயம் ஏற்பட்டது.

இவ்வாறு பல திடுக்கிடும் தகவல்களை வேலைக்காரர் நாராயண் கடந்த ஆண்டு நவம்பரில் பொலிசாரிடம் தெரிவித்து உள்ளார்.

அதை அறிந்த சசிதரூர் டெல்லி பொலிஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில், என் வேலைக்காரரை அடித்து உதைத்து பொலிஸ் அதிகாரிகள் போலியாக வாக்குமூலம் வாங்கியுள்ளனர் என தெரிவித்திருந்தார்.

அந்த தகவல் இரு நாட்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum