Top posting users this month
No user |
Similar topics
பல தானியச் சுண்டல்
Page 1 of 1
பல தானியச் சுண்டல்
தேவையானப்பொருட்கள்:
கொண்டைக்கடலை, காய்ந்த பட்டாணி, மொச்சைக்கொட்டை, காராமணி, கொள்ளு, பச்சைப்பயிறு - ஒவ்வொன்றும் 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை - எல்லா தானியங்களும் சேர்ந்து 2 கப்
காய்ந்த மிளகாய் - 3 முதல் 4 வரை
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
பச்சைப்பயிறை தனியாகவும், மற்ற தானியங்களை ஒன்றாகவும் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய தானியங்களை கழுவி சிறிது உப்பும் தண்ணீரும் சேர்த்து குக்கரில் போட்டு 2 அல்லது 3விசில் வரும் வரை வேக வைத்து, வடிகட்டி வைக்கவும்.
பச்சைப்பயிறை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து குழையாமல் வேக வைத்து வடித்தெடுக்கவும். குக்கரில் போட்டால் ஒரு விசில் போதுமானது.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், மிளகாயைக் கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, பின்னர் அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள தானியங்களைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்துக் கிளறி விடவும். இறக்கி வைக்கும் முன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவலைத் தூவி இறக்கி வைக்கவும்.
கொண்டைக்கடலை, காய்ந்த பட்டாணி, மொச்சைக்கொட்டை, காராமணி, கொள்ளு, பச்சைப்பயிறு - ஒவ்வொன்றும் 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை - எல்லா தானியங்களும் சேர்ந்து 2 கப்
காய்ந்த மிளகாய் - 3 முதல் 4 வரை
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
பச்சைப்பயிறை தனியாகவும், மற்ற தானியங்களை ஒன்றாகவும் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய தானியங்களை கழுவி சிறிது உப்பும் தண்ணீரும் சேர்த்து குக்கரில் போட்டு 2 அல்லது 3விசில் வரும் வரை வேக வைத்து, வடிகட்டி வைக்கவும்.
பச்சைப்பயிறை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து குழையாமல் வேக வைத்து வடித்தெடுக்கவும். குக்கரில் போட்டால் ஒரு விசில் போதுமானது.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், மிளகாயைக் கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, பின்னர் அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள தானியங்களைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்துக் கிளறி விடவும். இறக்கி வைக்கும் முன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவலைத் தூவி இறக்கி வைக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum