Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை: ஆவின் நிர்வாகம்

Go down

கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை: ஆவின் நிர்வாகம் Empty கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை: ஆவின் நிர்வாகம்

Post by oviya Mon Dec 07, 2015 1:44 pm

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வெள்ளத்தால் தமிழகமே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்காக உயர்ந்துள்ளது.

குறிப்பாக பால் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்துக் கொண்டு அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.

இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை மாநகரில் நாளொன்றுக்கு 11 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழையினால் சென்னை மாநகரில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி, ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவிற்கிணங்க, ஆவின் நிர்வாகத்தால் போர்க்கால அடிப்படையில், உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு, சென்னை மாநகரில் நேற்று முன்தினம் (5-12-2015) 10 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பாலும், நேற்று (6-12-2015) 10 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பாலும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மற்ற மாவட்டங்களில் உள்ள பால் பண்ணைகளிலிருந்தும், 1 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் வரவழைக்கப்பட்டு, சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சீரான முறையில் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ஆவின் நிர்வாகத்தால் அரைலிட்டர் (நீல நிற பாக்கெட்) மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு 17 ரூபாய்க்கும், சில்லறை விற்பனைக்கு 18 ரூபாய் 50 பைசாவிற்கும், (பச்சை நிற பாக்கெட்) அரைலிட்டர் மாதாந்திரபால் அட்டைதாரர்களுக்கு 19 ரூபாய் 50 பைசாவிற்கும், சில்லறை விற்பனைக்கு 20 ரூபாய் 50 பைசாவிற்கும், முழு கிரீம் பால் (ஆரஞ்சு நிற பாக்கெட்) அரைலிட்டர் மாதாந்திரபால் அட்டைதாரர்களுக்கு 21 ரூபாய் 50 பைசாவிற்கும், சில்லறை விற்பனைக்கு 22 ரூபாய் 50 பைசாவிற்கும், (மெகந்தா நிற பாக்கெட்) அரைலிட்டர் மாதாந்திரபால் அட்டைதாரர்களுக்கு 16 ரூபாய் 50 பைசாவிற்கும், சில்லறை விற்பனைக்கு 17 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேற்காணும் விலையை காட்டிலும் அதிக விலைக்கு பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டாலோ, அல்லது தங்கள் பகுதிகளில் பால் வினியோகம் தடைபட்டாலோ, பொதுமக்கள் இது தொடர்பாக 9840387510, 9840907494, 9443944908 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கப்பட்டு, பால் வினியோகம் தொய்வின்றி தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்யப்படும்.

முதலமைச்சரின் ஆணையின்படி, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பால் பவுடர் தொடர்ந்து தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரில் மட்டும் நேற்று முன்தினம் (5-12-2015) 75 டன் அளவிற்கும், நேற்று (6-12-2015) 55 டன் அளவிற்கும், ஆக மொத்தம் 130 டன் அளவிற்கான பால் பவுடர் நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆக மொத்தம், நேற்று வரை (6-12-2015) சென்னை, கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 453 டன் பால் பவுடர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கால்நடைபராமரிப்புத் துறை இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள, 15 கண்காணிப்புக் குழுக்கள், ஆவின் பால்சீராக வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும், நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் மற்றும் நிவாரண முகாம்களில் பால்பவுடர் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கீழ்க்கண்ட அவர்களது செல்போன் எண்களிலும், பொதுமக்கள் ஆவின் பால் மற்றும் பால்பவுடர் வினியோகம் குறித்து தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். 9449975518, 9841762577, 9840335202, 9444854300, 9443093126, 9445001109, 9444732720, 9840363896, 9445001110, 9840120004, 9884001987, 9445001108, 9445127272, 9445195912 மற்றும் 9445001112" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum