Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


யாழில் வெள்ள அனர்த்தத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Go down

யாழில் வெள்ள அனர்த்தத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை Empty யாழில் வெள்ள அனர்த்தத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Post by oviya Mon Dec 07, 2015 1:34 pm

யாழ்.மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் அதிகளவு பாதிப்புக்களை எதிர்கொள்ளும் பகுதிகளில் நீண்டகால பயன்பாட்டு அடிப்படையிலான வெள்ள அனர்த்த தவிர்ப்பு முன்னாயத்த நடவடிக்கைகள் 2 கிழமைகளுக்குள் தொடங்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் கூறியுள்ளார்.
இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற அனர்த்த முகாமைத் துவம் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவி க்கும்போதே மாவட்டச் செயலர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், யாழ்.மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பல பகுதிகள் நீர் தேங்கி நின்ற காரணத்தினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இவ்வ hறான நிலமை இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுத்து நிறுத்துவதற்காக நீர் தேங்கும் பகுதிகளை இனங்கண்டு அப்பகுதிகளில் நீர் தேங்காதவாறு இருப்பதற்கான நிரந்தர தீர்வு திட்டத்தினை தீட்டுவதற்கான கலந்துரையாடலே இன்று நடைபெற்றது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நிவாரணங்கள் தேவையில்லை என்றும், வெள்ளத்தினை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை செய்யுமாறும் கோரியுள்ளனர். சுதுமலை, நந்தாவில் பகுதியனைச் சேர்ந்த மக்களும், ரயில் பாதைகளுக்கு அருகில் உள்ள குடும்பங்களும் மேற்படி முறைப்பாட்டினை எமக்குத் தெரிவித்திருந்தனர்.

இதனடிப்படையில்தான் நிரந்த தீர்வினை காண்பதற்காக நாம் ஒன்று கூடியிருந்தோம். குறிப்பாக வீதி அபிவிருத்தி திணைக்களம், சிறு வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச செயலர்கள், பிரதேச சபை, நகர சபை, மாநகர சபையினரையும் அழைத்து இக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் சகல பிரதேச செயலர் பிரிவுகளின் வெள்ளம் தேங்குகின்ற பகுதிகள் இனங்காணப்பட்டது.

இவ்வாறு இனங்காணப்பட்ட பகுதிகளை சுத்தப்படுத்துவது மற்றும் வடிகால்களை ஆழமாக்குவது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல் இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு காண்பதற்கு நீண்ட கால திட்டத்தினை 2 கிழமைக்குள் தருமாறும் அனைவரிடத்திலும் கோரப்பட்டுள்ளது. இத் திட்டங்களுக்கான நிதியினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நாம் தயாராக உள்ளோம் என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum