Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 4 வருடங்களாக்குவேன்: மைத்திரிபால

Go down

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 4 வருடங்களாக்குவேன்: மைத்திரிபால Empty ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 4 வருடங்களாக்குவேன்: மைத்திரிபால

Post by oviya Fri Jan 02, 2015 1:55 pm

உலகத்தில் எந்த நாட்டிலும் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு வருடங்கள் இல்லை எனவும் தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நான்கு வருடங்களாக குறைக்க போவதாக பொது வேட்பாளர் மைத்திபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டம் வெல்லவேரியில் நடந்த கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். கம்பஹா மாவட்டத்தின் ஐ.தே.கட்சியின் தொடர்பாடல் படையணியின் உறுப்பினர் துஷார லியனகே, பிரதேச சபை உறுப்பினர் நிலந்த பெரேரா மற்றும் வர்த்தகர் பந்து லியனகே தலைமையில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் ஆட்சியின் முதலிடம் அப்பாவி மக்களின் பசியை போக்குவதே. இந்நாட்டின் இளைய தலைமுறையினர் இன்று மிக மோசமான நிலையில் உள்ளார்கள். புதிய தொழில்நுட்பத்துடன் முன்னோக்கி செல்லும் அணுகுமுறை இன்று இல்லை நாங்கள் அதற்கான வழியை ஆயத்தம் செய்து கொடுப்போம்.

சிலர் கூறுகிறார்கள் நான் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் யுத்தம் வரும் என்றும் இந்நாட்டில் அரசியல் நிச்சயமற்ற தன்மையாக காணப்படும் என்கிறார்கள்.

தற்போதைய அரசாங்கமே நிச்சியமற்ற தன்மையுடன் காணப்படுகின்றது. ஒரு குடும்பமே ஆட்சி செய்வதனாலே அரசாங்கம் நிச்சயமற்ற தன்மையுடன் காணப்படுகின்றது. நான் ஒரு காலமும் யுத்ததிற்கு இடமளிக்க மாட்டேன்.

மீண்டும் விடுதலை புலிகள் தலை தூக்க விடமாட்டேன். யுத்தம் நிறைவடையவிருந்த கடைசி இரண்டு வாரங்கள் இந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக கடமையிலிருந்தேன் என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum