Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தரமான துணிகள் மாணவர்களுக்கு கிடைப்பதற்காகவே வவுச்சர் முறை அறிமுகம்: கல்வியமைச்சர்

Go down

தரமான துணிகள் மாணவர்களுக்கு கிடைப்பதற்காகவே வவுச்சர் முறை அறிமுகம்: கல்வியமைச்சர்  Empty தரமான துணிகள் மாணவர்களுக்கு கிடைப்பதற்காகவே வவுச்சர் முறை அறிமுகம்: கல்வியமைச்சர்

Post by oviya Thu Nov 19, 2015 12:34 pm

தரமற்ற துணிகள் மாணவர்களுக்கு கிடைப்பதை தடுக்கவும் இடைத்தரகர்கள் தரகு பணத்தை பெறுவதை தடுக்கவுமே சீருடை துணிக்கு பதிலாக வவுச்சர்களை மாணவர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 500 மில்லியன் ரூபாவை மீதப்படுத்தி, அதனை கல்வி முன்னேற்றத்திற்கு பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் 42 லட்சம் பாடசாலை மாணவர்கள் உள்ளனர். இவர்களின் சீருடைக்காக வருடாந்தம் 2.3 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

புதிய திட்டத்தின் ஊடாக 1.3 பில்லியன் மாத்திரமே செலவாகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சீருடைகள் வழங்கும் போது அவற்றை உரிய முறையில் பரிசோதிப்பதில்லை என்பதால், மாணவர்களுக்கு தரமற்ற துணிகளே பெரும்பாலும் கிடைத்து வந்துள்ளது.

மேலும் முதலாம் தர மாணவர்களுக்கு வழங்கப்படும் துணி பெரிதாகவும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் துணிகள் போதுமானதாகவும் இருப்பதில்லை.

புதிய முறை மூலம் மாணவர்கள் தைத்த சீருடைகளை கொள்வனவு செய்து கொள்ள முடியும். வவூச்சர் முறை மூலம் மாணவர்களுக்கு ஆயிரத்து 700 ரூபாவுக்கான வவூச்சர் வழங்கப்படும்.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 400 ரூபா வவூச்சரும் அதற்கு மேலதிகமாக 1000, 800, 750, 720 ரூபா பெறுமதியான வவூச்சர்கள் வழங்கப்படும்.

வழங்கப்படும் வவூச்சர்களை அரச வங்கிகளில் பணமாக மாற்றிக்கொள்ள முடியும். இதனை வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர் பரிந்துரை செய்ய வேண்டும்.

துணிகளின் விலைகள் அதிகரித்தால், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வசதி படைத்த பெற்றோர் வவூச்சர்களை பெறவிரும்பவில்லை என்றால்,

அந்த பணத்தை கொண்டு கஷ்ட பிரதேசங்களை சேர்ந்த மாணவர்கள் வருடத்தில் இரு முறை சீருடைகளை பெறும் வகையில் அது வழங்கப்படும் எனவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum