Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


3 மாதத்தில் கசந்த திருமணம்: காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்

Go down

3 மாதத்தில் கசந்த திருமணம்: காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன் Empty 3 மாதத்தில் கசந்த திருமணம்: காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்

Post by oviya Wed Dec 31, 2014 2:06 pm

மேற்கு வங்காளத்தில், திருமணமான 3 மாதத்தில் காதல் கசந்ததால் காதல் மனைவியை பொறியாளர் ஒருவர் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேற்கு வங்காளம் காலிங்பூர் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த மெகபூப் அலியும் (22), அதே பகுதியை சேர்ந்த நிமலா பூட்டியாவும் (19). கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய திருமணம் செய்து கொண்டு தனி வீட்டில் வாழத்தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், நாட்கள் செல்ல செல்ல காதல் தம்பதியினருக்கிடையே அன்யோன்யம் குறையத்தொடங்கியதுடன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகியது.

இதையடுத்து கடந்த 23 நாட்களுக்கு முன்பு மெகபூப் அலி தனது மனைவியை அழைத்துக்கொண்டு கோவையில் உள்ள உறவினர் வீட்டில் குடியேறியுள்ளார்.

ஆனால் இங்கும் மெகபூப் அலிக்கும், அவரது மனைவி நிமலா பூட்டியாவுக்குமிடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.

நேற்று மதியம் மெகபூப் அலி தான் வேலை செய்யும் கடையின் அலுவலகத்தில் மனைவி நிமலா பூட்டியாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் மெகபூப் அலியை பொலிசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பொலிஸார் விசாரணையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த நான் பி.டெக். படித்துள்ளேன், 12ம் வகுப்பு படித்த நிமலா பூட்டியாவை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டேன்.

ஆரம்பத்தில் இனிமையாக வாழ்க்கையை கழித்த எங்களுக்குள் நாளுக்கு நாள் கருத்துவேறுபாடு அதிகமானது.

இதனால் கோவைக்கு வந்தபோதும், இங்கேயும் எங்களது குடும்பத்தகராறு நீடித்தது.

என்னிடம் கோபித்துக்கொண்டு நிமலா பூட்டியா கோவையில் வசிக்கும் அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நான் என்னுடன் சேர்ந்து வாழ வரும்படி அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

நிமலா பூட்டியாவின் உறவினரை தொடர்பு கொண்டு என் மனைவியை சேர்த்து வைக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

இதையடுத்து அவர்களும் நான் கூறியபடி நேற்று நான் வேலை பார்க்கும் கடைக்கு அழைத்து வந்தனர்.

அப்போது நிமலா பூட்டியா என்னிடம், உன்னுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை, கர்ப்பத்தை கலைத்து விட்டு சொந்த ஊருக்கு செல்ல உள்ளேன். அங்கு வேறு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பேன் என்று கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த நான் அலுவலகத்தில் இருந்த கத்தியை எடுத்து பூட்டியாவை சரமாரியாக குத்தி கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum