Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80,000 கோடி நிதி: பிரதமர் மோடி

Go down

ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80,000 கோடி நிதி: பிரதமர் மோடி Empty ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80,000 கோடி நிதி: பிரதமர் மோடி

Post by oviya Sat Nov 07, 2015 1:29 pm

ஜம்மு-காஷ்மீர் மாநில ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ரூ.80,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் ஆளுங் கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீர் மாநில ஒட்டுமொத்த வளர்ச்சுக்கு ரூ.80,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த நிதியுதவி மூலம் 2014 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் பலனடைவர்.

சுற்றுலாத் துறை வளர்ச்சி காணும், மாநிலத்தின் உட்கட்டுமானம் மேம்படுத்தப்படும்.

மத்திய அரசின் கருவூலம் மட்டுமல்ல, டெல்லியின் இதயமும் எப்போதும் காஷ்மீர் மக்களை ஆதரிக்கும் என பேசியுள்ளார்.



மோடி வருகைக்கு ஜம்மு-கஷ்மீரில் கடும் எதிர்ப்பு:

ஜம்மு-கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடக்கும் பொது கூட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு இடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜம்மு காஷ்மீரில் இரு கட்சிகளின் கூட்டு பொது கூட்டம் நடத்தப்படுகிறது.

ஸ்ரீநகரில் நடக்கும் இந்த பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னெசெரிக்கை நடவடிக்கையாக 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் இருவர் நிகழ்ச்சியை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

மேலும், மோடி வருகைக்கு பிரிவினை வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அதனை முறியடிக்க பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமரின் வருகையை ஒட்டி ஸ்ரீநகரில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு-காஷ்மீர் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. ரஷீத் கறுப்புக் கோடி காட்டியதால் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum