Top posting users this month
No user |
ஐ.தே.கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் காவல்துறையினரிடம் சரண்
Page 1 of 1
ஐ.தே.கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் காவல்துறையினரிடம் சரண்
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் திஸ்ஸ பண்டார இன்று காவற்துறையினரிடம் சரணடைந்தார்.
தம்புள்ள காவற்துறை நிலையத்தில் அவர் இன்று காலை சரணடைந்துள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாகாண சபை உறுப்பினர் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒருவரை தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து காவற்துறையினர் அவரை கைது செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அவர் தானாக முன் வந்து காவற்துறையில் சரணடைந்துள்ளார்.
இன்று காலை தன் சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட திஸ்ஸ பண்டாரவுக்கு எதிரான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று மாலை நீதிவான் முன்பு அவரை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மொனராகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஆர்.எம். ரத்நாயக்கவும் இன்று காலை பொலிசில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலின்போது ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவரைத் தாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கடந்த பத்துமாதங்களாக தலைமறைவாக இருந்த அவர் இன்று காலை பொலிசில் சரணடைந்துள்ளார்.
தம்புள்ள காவற்துறை நிலையத்தில் அவர் இன்று காலை சரணடைந்துள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாகாண சபை உறுப்பினர் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒருவரை தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து காவற்துறையினர் அவரை கைது செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அவர் தானாக முன் வந்து காவற்துறையில் சரணடைந்துள்ளார்.
இன்று காலை தன் சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட திஸ்ஸ பண்டாரவுக்கு எதிரான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று மாலை நீதிவான் முன்பு அவரை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மொனராகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஆர்.எம். ரத்நாயக்கவும் இன்று காலை பொலிசில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலின்போது ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவரைத் தாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கடந்த பத்துமாதங்களாக தலைமறைவாக இருந்த அவர் இன்று காலை பொலிசில் சரணடைந்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum