Top posting users this month
No user |
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
Page 1 of 1
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலைப்பீட மாணவர்கள் மற்றும் விரிவுரையளர்கள் கலந்து கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் இந்த போராட்டம் நடைபெற்றது.
மாணவர்கள், விரிவுரையாளர்கள் வளாகத்திலிருந்து வாயில் வரை நடந்து வந்து வாயிலில் நின்று போராட்டத்தை நடத்தினர். இதன்போது சிறைகளில் உள்ள உறவுகளை நல்லாட்சி குறித்து பேசிக்கொள்ளும் அரசாங்கம் விடுதலை செய்யவேண்டும் என மாணவர்கள் கேட்டுக் கொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum