Top posting users this month
No user |
புழல் சிறையில் பயங்கர மோதல்: காவலர்களை தாக்கிய கைதிகள்
Page 1 of 1
புழல் சிறையில் பயங்கர மோதல்: காவலர்களை தாக்கிய கைதிகள்
புழல் சிறையில் நேற்று கைதிகள் மற்றும் சிறைக் காவலர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், சிறை ஜெயிலர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் சிறை காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புழல் சிறையின் இரண்டாவது பகுதியில் விசாரணைக் கைதிகள் சுமார் ஆயிரம் பேர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், புழல் சிறை ஜெயிலர் இளவரசன், உதவி ஜெயிலர் குமார், வார்டர் முத்துமணி, எலக்ட்ரீசியன் மாரி என்ற மாரியப்பன் மற்றும் சில காவலர்கள் சிறையின் கைதிகள் அறையை சோதனையிடும் பணியில் நேற்று ஈடுப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முஸ்லிம் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சோதனையிடச் சென்றபோது அங்கிருந்தவர்கள் சிறைத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது அந்த கைதிகள் திடீரென சிறைத்துறை அதிகாரிகளையும், காவலர்களையும் பயங்கரமாக தாக்க தொடங்கினர்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த வார்டர் முத்துமணியும், படுகாயமடைந்த ஜெயிலர் இளவரன், இவர்களுடன் சென்ற இரு சிறைக் காவலர்கள் ரவி, மோகன், செல்வின் தேவதாஸ் ஆகியோர் சிகிச்சைக்காக உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உதவி ஜெயிலர் குமார், எலக்ட்ரீசியன் மாரி ஆகிய இருவரையும் கைதிகள் சிறை வைத்தனர். இதனால் புழல் சிறைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர புழல் சிறை வெளிப் பகுதியில் கமாண்டோ படையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சிறைத்துறை தலைமையிட டி.ஐ.ஜி. ஏ.ஜி.மௌரியா, சென்னை சரக டி.ஐ.ஜி. ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் புழல் சிறைக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் உதவி ஜெயிலர் குமாரையும், எலக்ட்ரீசியன் மாரியையும் கைதிகள் விடுவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக , புழல் சிறையில் இருந்து 6 கைதிகளை வெவ்வேறு சிறைக்கு மாற்றி சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பன்னா இஸ்மாயில் மதுரை சிறைக்கும், பிலால் மாலிக் கடலூர் சிறைக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். இதேபோல், போலீஸ் ஃபக்ருதீன் வேலூர் சிறைக்கும், காஜா மொய்தீன் சேலம் சிறைக்கும், முன்னா கோவை மத்திய சிறைக்கும், அப்துல்லா திருச்சி சிறைக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
மேலும், இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சிறைத்துறை அதிகாரிகளுக்கிடையே அதிர்ச்சியை
சென்னை புழல் சிறையின் இரண்டாவது பகுதியில் விசாரணைக் கைதிகள் சுமார் ஆயிரம் பேர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், புழல் சிறை ஜெயிலர் இளவரசன், உதவி ஜெயிலர் குமார், வார்டர் முத்துமணி, எலக்ட்ரீசியன் மாரி என்ற மாரியப்பன் மற்றும் சில காவலர்கள் சிறையின் கைதிகள் அறையை சோதனையிடும் பணியில் நேற்று ஈடுப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முஸ்லிம் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சோதனையிடச் சென்றபோது அங்கிருந்தவர்கள் சிறைத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது அந்த கைதிகள் திடீரென சிறைத்துறை அதிகாரிகளையும், காவலர்களையும் பயங்கரமாக தாக்க தொடங்கினர்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த வார்டர் முத்துமணியும், படுகாயமடைந்த ஜெயிலர் இளவரன், இவர்களுடன் சென்ற இரு சிறைக் காவலர்கள் ரவி, மோகன், செல்வின் தேவதாஸ் ஆகியோர் சிகிச்சைக்காக உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உதவி ஜெயிலர் குமார், எலக்ட்ரீசியன் மாரி ஆகிய இருவரையும் கைதிகள் சிறை வைத்தனர். இதனால் புழல் சிறைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர புழல் சிறை வெளிப் பகுதியில் கமாண்டோ படையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சிறைத்துறை தலைமையிட டி.ஐ.ஜி. ஏ.ஜி.மௌரியா, சென்னை சரக டி.ஐ.ஜி. ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் புழல் சிறைக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் உதவி ஜெயிலர் குமாரையும், எலக்ட்ரீசியன் மாரியையும் கைதிகள் விடுவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக , புழல் சிறையில் இருந்து 6 கைதிகளை வெவ்வேறு சிறைக்கு மாற்றி சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பன்னா இஸ்மாயில் மதுரை சிறைக்கும், பிலால் மாலிக் கடலூர் சிறைக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். இதேபோல், போலீஸ் ஃபக்ருதீன் வேலூர் சிறைக்கும், காஜா மொய்தீன் சேலம் சிறைக்கும், முன்னா கோவை மத்திய சிறைக்கும், அப்துல்லா திருச்சி சிறைக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
மேலும், இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சிறைத்துறை அதிகாரிகளுக்கிடையே அதிர்ச்சியை
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum