Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஒரே குழுவினாலே எக்னெலிகொட இரண்டு முறை கடத்தப்பட்டார்?

Go down

ஒரே குழுவினாலே எக்னெலிகொட இரண்டு முறை கடத்தப்பட்டார்? Empty ஒரே குழுவினாலே எக்னெலிகொட இரண்டு முறை கடத்தப்பட்டார்?

Post by oviya Wed Sep 23, 2015 1:33 pm

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட முதல் முறையாகவும் இரண்டாவது முறையாகவும் ஒரு குழுவினால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிப்படுகின்றது.
முதல் முதலாக பிரகீத் எக்னெலிகொட 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27ம் திகதி கடத்தப்பட்டார்.

அதன் பின்னர் அவர் 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டார், அப்படி என்றால் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதியாகும்.

எக்னெலிகொட விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல் வெளியாகின, அவர் விடுதலைப் புலிகளுடன் ஊடகவியலாளர் என்ற வகையில் தகவல் சேகரிப்பதற்காக தொடர்பு வைத்திருந்தாரே தவிர குற்றவியல் நடவடிக்கைகளில் ஆதரவு வழங்குவதற்காக அல்ல என தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்கெனலிகொட அரசியல் காரணமாகவே கடத்தப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரகீத் எக்னெலிகொட கடித்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை குறித்து அவரது மனைவி சந்தியா எக்னெலிகொடவிடம் ஊடகம் ஒன்று வினவியதற்கு பதிலளித்த அவர்,

தற்போது வரையில் இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரவினால் மேற்கொள்கின்ற விசாரணை நடவடிக்கை தொடர்பில் தான் திருப்தியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியினுள் அவரது அழுத்தங்களின் காரணமாக தனது கணவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இச் சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் சந்தியா என்னெலிகொட தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டமையை தொடர்ந்து இவ் விசாரணை நடவடிக்கைகள் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்படுகின்றதனை தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக இவ் விசாரணை நடவடிக்கைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 12ம் திகதியில் இருந்து இதுவரையில் அவர்கள் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கை தொடர்பில் தான் திருப்தியடைவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum