Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மாணவர்களிடையே இன, மொழிப் பற்று அவசியம்! சிறீதரன்

Go down

மாணவர்களிடையே இன, மொழிப் பற்று அவசியம்! சிறீதரன் Empty மாணவர்களிடையே இன, மொழிப் பற்று அவசியம்! சிறீதரன்

Post by oviya Mon Sep 14, 2015 3:10 pm

தமது இன, மொழிப் பற்று என்பன மாணவர்களிடையே ஏற்பட வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கரவெட்டி கரணவாய் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா கடந்த 12ம் நாள் பாடசாலையின் அதிபர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

பாடசாலைக் காலங்கள் வாழ்வின் பயணத்துக்கான சகல அனுபவங்களை ஆற்றலை தரவல்லது. அதைச் சரியாகப் பயன்படுத்துகின்றவர்கள் வாழ்வில் வெற்றி அடைந்தவர்களாக மாறுகின்றார்கள்.

ஆசிரியர்களை, கற்பிக்கின்றவர்களை மதித்து அவர்களிடமிருந்து அனுபவங்களை ஆற்றல்களை மாணவர்கள் பெற்றுக்கொள்வது அவசியம். பாடசாலைக் காலங்களில் பெறப்படுகின்ற வெற்றிகளை தோல்விகளையும் மாணவர்கள் சமமான மனப்பக்குவத்துடன் அணுகி தோல்விகளுக்கான காரணங்களை கண்டறிவதும் வெற்றிகளை படிக்கல்லாக்கி அதில் ஏறி மேலும் சிகரங்களை தொட முயற்சிப்படுத்துவதும் அவசியம்.

உலகில் வெற்றி பெற்றவர்களின் வரலாறுகளை மாணவர்கள் இளைய சமுதாயத்தினர் தேடி அதை அறிவது அவசியம். தனது இனம் மொழி பற்றிய பற்றுதல் அவசியம்.

எல்லைகளைக் கடந்து உலக மையத்தில் போட்டி போடுகின்ற போது தான் பிறந்த மண், தேசம், மொழி, இனம் பற்றிய பற்றுதல் அவனுக்கு ஒரு வெற்றியை நோக்கிய உந்துதலை உருவாக்கும். மாணவர்கள் தங்கள் திறமைகளால் பாடசாலையை நாடறியச்செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் அயல்ப் பாடசாலையின் அதிபர்கள் பாடசாலை சமுகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum