Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புதிய அமைச்சரவை பகிர்வில் பாரிய சிக்கல்கள் காணப்பட்டன: ஜனாதிபதி மைத்திரி

Go down

புதிய அமைச்சரவை பகிர்வில் பாரிய சிக்கல்கள் காணப்பட்டன: ஜனாதிபதி மைத்திரி Empty புதிய அமைச்சரவை பகிர்வில் பாரிய சிக்கல்கள் காணப்பட்டன: ஜனாதிபதி மைத்திரி

Post by oviya Fri Sep 04, 2015 3:13 pm

கடந்த 8 மாத காலப்பகுதியினுள் நாட்டுக்கு புதிய அரசியல் அனுபவங்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சரவை பதவி பிரமாணம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

என்னை பொது வேட்பாளராக நியமித்து மக்கள் ஆதரவுடன் செயற்பட்ட 100 நாட்கள் தற்காலிக நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடமே இருந்தன.

எங்களின் 100 நாள் வரவு செலவு திட்டத்திற்கு மற்றும் 19ஆம் திருத்தச்சட்டத்திற்கு முன்னணி ஆதரவு வழங்கியது.

நாங்கள் தேசிய அரசாங்கம் உருவாக்குவதற்கு தற்காலிக அரசாங்கத்தில் தீவரமாக மேற்கொண்ட சில முயற்சிகள் வெற்றியளித்தன.

நாங்கள் தேசிய அரசாங்கத்தை அமைக்க விடுத்த அழைப்பிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து கொண்டது.

2010ஆம் ஆண்டு மூன்றில் இரண்டு அதிகாரம் கிடைத்தும் அமைச்சரவை தெரிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

அந்த அனுபவங்கள் எங்களுக்கு உள்ளதனை போன்று பிரதான இரண்டு கட்சியும் அரசாங்கம் அமைக்கும் போதும் சிக்கல் ஏற்படும் என புரிந்துகொள்ள வேண்டும்.

அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை தெரிவு செய்யும் போது பிரச்சினைகள் இருந்தாலும் வழங்கிய ஆதரவுகளுக்கு நன்றி.

அமைச்சர் பதவி கிடைத்தவர்கள் கிடைத்த துறையினை பற்றி சிந்திப்பார்கள், கிடைக்காதவர்களை கிடைக்காததனை குறித்து சிந்திப்பார்கள்.

அமைச்சு பதவிகள் கிடைத்தவர்களால் கிடைக்காதவர்களை மகிழ்ச்சிபடுத்துவது இலகுவான விடயம் அல்ல.

நாடாளுமன்றில் 225 பேர் கொண்ட பெரும்பான்மை அரசாங்கத்துடன் செயற்படுகின்றது.

நான்கரை வருடங்கள் நிறைவடையும் வரையில் அரசாங்கத்தை கலைக்க முடியாது. இந்த அமைச்சரவை தான் எதிர்வரும் 5 வருடங்கள் செயற்படும்.

இரண்டு வருடங்கள் நிறைவடைந்த பின்னர் தொடர்ந்து என்ன நடக்கும் என்பதனை குறித்து சிந்திக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum