Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தோட்டத் தொழிலாளர்களுக்கான சலுகைகள் வழங்கப்படவில்லை: ஆர்ப்பாட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்

Go down

தோட்டத் தொழிலாளர்களுக்கான சலுகைகள் வழங்கப்படவில்லை: ஆர்ப்பாட்டத்தில் குதித்த தொழிலாளர்கள் Empty தோட்டத் தொழிலாளர்களுக்கான சலுகைகள் வழங்கப்படவில்லை: ஆர்ப்பாட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்

Post by oviya Thu Aug 27, 2015 2:47 pm

தோட்ட நிர்வாகத்தினால் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை வழங்காத காரணத்தினால் அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தில் இன்று 100 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் காலை 10 மணிக்கு தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்தின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படவில்லை. அத்தோடு மாதாந்தம் வழங்கப்படும் தேயிலை தூள் தரம் குறைந்ததாக வழங்கப்படுகின்றது

தோட்ட மக்களின் சுகாதார நடவடிக்கை முறையாக செய்துகொடுப்பதில்லை. தோட்டத்தில் உள்ளவர்களுக்கு தொழில் வழங்கினாலும் அவர்களை பதிவுசெய்யாமல் தற்காலிக தொழிலாளர்களாக வைத்துள்ளனர்.

தொழிற்சங்கத் தலைவர்கள் பிரச்சினைகளை தோட்ட அதிகாரியிடம் தெரிவித்தாலும் தோட்ட காரியாலயத்தில் வைத்து மிகவும் மோசமான வார்த்தைகளால் பேசப்படுவதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு சில தினங்களுக்கு முன்பு தோட்டக் கங்காணி ஒருவரை தோட்ட அதிகாரி காரியாலயத்திற்கு அழைத்து செய்யாத குற்றங்களை கூறி வேலையில் இருந்து நீக்கியதுடன் சம்பந்தபட்ட கங்காணியை தோட்ட அதிகாரி அடிக்கமுயற்சி செய்ததாக கங்காணி தெரிவிக்கின்றார்.

பெண் தொழிலாளர்களுக்கு வருத்தங்கள் ஏற்ப்படும் போது அவர்களுக்கான விடுமுறையை வழங்கப்படுவதில்லை. இவ்வாறான சூழ்நிலை ஏற்படும் போது அவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.

இதுபோன்ற சலுகைகளை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தே இம்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சலுகைகளை வழங்க தோட்ட அதிகாரி முன்வராவிட்டால் தொடர்ச்சியாக வேளை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum