Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை

Go down

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை Empty ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை

Post by oviya Thu Aug 06, 2015 1:54 pm

செம்மரக் கடத்தலில் ஆந்திரா பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் வாரிசுதாரர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சேஷாசல வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் 7.4.2015 அன்று நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 12 நபர்கள், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 நபர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 20 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

இதனையடுத்து ஆந்திர மாநில முதலமைச்சருக்கு தமிழக அரசின் சார்பில் விரைவான மற்றும் நம்பகமான விசாரணைக்கு ஆணையிடவேண்டும் என்றும் உண்மை நிலை அறியப்பட்டு மனித உரிமை மீறல் குற்றம் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு போதிய நிவாரணம் அளிக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்கள் தமிழக அரசின் சுகாதாரத் துறையின் அமரர் ஊர்திகள் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

உயிரிழந்த 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு, தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு ஏதுவாக அரசு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா, இம்மனுதாரர்களது கோரிக்கையினை பரிவுடனும், கருணையுடனும் ஏற்று மனுதாரர்களின் தகுதிக்கேற்ப பணி வழங்கிட ஆணையிட்டார்.

அதன் அடிப்படையில் மேற்கண்ட 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 5 நபர்களுக்கு அவர்களுக்கான பணி முதலமைச்சரிடம் இருந்து பணிநியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்டவர்கள், முதலமைச்சருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum