Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மசாலா உளுந்து பூரி

Go down

மசாலா உளுந்து பூரி Empty மசாலா உளுந்து பூரி

Post by abirami Sun Aug 02, 2015 5:41 pm


மைதாமா (கோதுமைமா) - 500 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
பால் - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - 200 கிராம்
பெருஞ்சீரகம் (தனியா) - 2 தேக்கரண்டி
சின்ன சீரகம் (சீரகம்) - 2 தேக்கரண்டி
செத்தல் மிளகாய் (காய்ந்த மிளகாய்) - 4
மிளகு - சிறிதளவு
பட்டர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர்- தேவையான அளவு
கொதிதண்ணீர்- தேவையான அளவு


ஒரு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பை போட்டு அதன் மேல் தண்ணீர் விட்டு அதனை 1 மணித்தியாலம் ஊறவிட்டு அதனை அரைக்கவும்.
பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருஞ்சீரகம்(தனியா), சின்னசீரகம்(சீரகம்), செத்தமிளகாய்(காய்ந்தமிளகாய்), மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் மைதாமா(கோதுமைமா), உப்பு, பட்டர், பால், கொதிதண்ணீர் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்திக்கு (ரொட்டிக்கு)மா குழைப்பதினை போல குழைக்கவும்.
குழைத்த மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
சிறிய உருண்டைகளாக உருட்டியதன் பின்பு அதிலிருந்து ஒரு உருண்டையை எடுத்து அதனை ஒரு பலகையில் வைத்து அதனை ரோலரினால் (உருட்டு கட்டையினால்) உருட்டி தட்டையாக்கவும்(அப்பளம் போல தட்டவும்).
பின்பு செய்து வைத்திருக்கும் உளுந்து கலவையில் இருந்து (1- 2)மேசைக்கரண்டி எடுத்து அதனை தட்டையாக்கிய மாவின் நடு பகுதியின் மேல் வைத்து மூடவும்.
மூடிய பின்பு அதனை மீண்டும் உருண்டையாக்கி மீண்டும் ரோலரினால்(உருட்டு கட்டையினால்)உருட்டி தட்டையாக்கவும்(பூரி போல தட்டவும்).
தட்டியபின்பு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பின்பு இதனை போல மற்றைய பூரிகளையும் செய்யவும்.
எல்லாவற்றையும் செய்த பின்பு அவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கியபின்பு அதில் எண்ணெய்விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் தட்டி வைத்திருக்கும் பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு அதனை பொரித்து எடுக்கவும்.
அதன் பின்பு பூரி தயாராகிவிடும். தயாரான பூரியை இரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இதனைப் போல எல்லா பூரிகளையும் செய்து பொரித்தெடுத்து வைக்கவும்.
பின்பு ஒருதட்டில் மசாலா உளுந்துபூரிகளை வைத்து அதனுடன் கிழங்கு பிரட்டல் கறியுடன் அல்லது ஏதாவது ஒரு பிரட்டல் கறியுடன் பரிமாறவும்.
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum