Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கடலைப்பருப்பு துவையல்

Go down

கடலைப்பருப்பு துவையல் Empty கடலைப்பருப்பு துவையல்

Post by abirami Sun Aug 02, 2015 5:36 pm


கடலைப்பருப்பு - 100 கிராம்
தேங்காய்ப்பூ - அரைப்பாதி
பச்சைமிளகாய் - (15 - 20)
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம்(சிறிதாக நறுக்கிய) - 10
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம்(fennel) - 2 சிட்டிகை
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
தேசிக்காய்(எலுமிச்சம்காய்)சாறு - ஒரு தேக்கரண்டி


கடலைப்பருப்பை நன்றாக கழுவி துப்பிரவு செய்து ஒரு தட்டில் அதனை போட்டு காயவிடவும்.
கடலைப்பருப்பு காய்ந்த பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கவும்.
சூடாக்கிய பின்பு அதில் காய்ந்த கடலைப்பருப்பினை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
வறுத்தெடுத்த பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக ஆறவிடவும்.
ஆறிய பின்பு கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து 3 மணித்தியாலம் ஊறவிடவும்.
ஊறிய கடலைப்பருப்பை கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு அதனுடன் தேங்காய்ப்பூ, பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து 3/4 பதமாக அரைக்கவும்.
அரைத்த பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கவும்.
தாட்சியை(வாணலியை) சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகைப்போட்டு வெடிக்கவிடவும்.
கடுகு வெடித்ததும், சிறிதாகவெட்டியவெங்காயம், கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின்பு அதில் தேங்காய்ப்பூ பச்சைமிளகாய் சேர்த்து அரைத்த கடலைப்பருபை போடவும்.
எல்லாவற்றையும் நன்றாக சேர்த்து கலக்கவும். பின்பு அதனை நன்றாக கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்த பின்பு அதனுடன் உப்பை சேர்த்து நன்றாக கலந்த பின்பு அதனை ஒரு நிமிடங்கள் அப்படியே விடவும் .
ஒரு நிமிடங்களின் பின்பு அதனுடன் தேசிக்காய்(எலுமிச்சம்பழம்)சாறு விட்டு கலந்து ஒரு நிமிடங்கள் அப்படியே விடவும்.
அதன் பின்பு சுவையான சத்தான கடலைப்பருப்பு துவையல் தயாராகி விடும்.
தயாராகிய கடலைப்பருப்பு துவையல் உள்ள பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி கடலைப்பருப்பு துவையலை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.
சூடு ஆறிய பின்பு ஒரு தட்டில் இடியப்பம், சோறு(சாதம்), புட்டு, தோசை, இட்லி, பாண் ஆகியவற்றில் ஒன்றுடன் கடலைப்பருப்பு துவையலை வைத்து பரிமாறவும்.
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum