Top posting users this month
No user |
ஜனாதிபதி ஓய்வுபெறக் கூடாது: மைத்திரி நண்பர்கள் அமைப்பு
Page 1 of 1
ஜனாதிபதி ஓய்வுபெறக் கூடாது: மைத்திரி நண்பர்கள் அமைப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்த பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெறக் கூடாது என அவரிடம் கோரிக்கை விடுப்பதாக மைத்திரி நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பிரபல கலைஞர் தர்மசிறி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
5 ஆண்டுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சியை மிக சிறந்த முறையில் முன்னெடுத்துச் சென்று நாடு அந்த இடத்தை நோக்கி சரியாக வந்தால், ஜனாதிபதி மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
நல்ல மனிதர் ஒருவர் ஆளும் தேசம் எமக்கு அவசியம். அந்த நல்ல மனிதர் மைத்திரிபால சிறிசேனவாக இருக்கவேண்டும் என நாம் பிரார்த்திக்கின்றோம் எனவும் தர்மசிறி பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பேராசிரியர் சரத் விஜேசூரிய, ஜனாதிபதி நடு நிலையாக செயற்படுவது நாட்டின் நலனுக்கு மிகவும் முக்கியமானது என கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலில் ஜனாதிபதி சுயாதீனமாக செயற்படும் விதத்தை காணமுடிகிறது. அவர் தொடர்ந்தும் நடுநிலையாக இருந்து நாட்டின் அரசியல் கலாசாரத்திற்கு பங்களிக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
5 ஆண்டுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சியை மிக சிறந்த முறையில் முன்னெடுத்துச் சென்று நாடு அந்த இடத்தை நோக்கி சரியாக வந்தால், ஜனாதிபதி மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
நல்ல மனிதர் ஒருவர் ஆளும் தேசம் எமக்கு அவசியம். அந்த நல்ல மனிதர் மைத்திரிபால சிறிசேனவாக இருக்கவேண்டும் என நாம் பிரார்த்திக்கின்றோம் எனவும் தர்மசிறி பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பேராசிரியர் சரத் விஜேசூரிய, ஜனாதிபதி நடு நிலையாக செயற்படுவது நாட்டின் நலனுக்கு மிகவும் முக்கியமானது என கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலில் ஜனாதிபதி சுயாதீனமாக செயற்படும் விதத்தை காணமுடிகிறது. அவர் தொடர்ந்தும் நடுநிலையாக இருந்து நாட்டின் அரசியல் கலாசாரத்திற்கு பங்களிக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum