Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சாலை விபத்துக்களில் முதலிடம்..தற்கொலையில் 2ம் இடம்: தமிழகத்தின் அவல நிலை

Go down

சாலை - சாலை விபத்துக்களில் முதலிடம்..தற்கொலையில் 2ம் இடம்: தமிழகத்தின் அவல நிலை Empty சாலை விபத்துக்களில் முதலிடம்..தற்கொலையில் 2ம் இடம்: தமிழகத்தின் அவல நிலை

Post by oviya Sun Jul 19, 2015 2:41 pm

சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தையும், தற்கொலையில் 2வது இடத்தையும் பிடித்துள்ளது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம், தற்போது இந்தியாவில் ஏற்பட்ட விபத்து இறப்புகள் மற்றும் தற்கொலை தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு அறிக்கையின்படி, கடந்த 2014ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 666 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

அவர்களில் 89 ஆயிரத்து 129 பேர் ஆண்கள், 42 ஆயிரத்து 521 பேர் பெண்கள். இதர 16 பேர் திருநங்கைகள்.

தற்கொலை செய்து கொண்ட பெண்களில் 20 ஆயிரத்து 148 பேர் குடும்பத் தலைவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே தற்கொலை செய்து உயிரிழந்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் மராட்டிய மாநிலம் உள்ளது.

அங்கு கடந்த ஓராண்டில் மட்டும் 16 ஆயிரத்து 307 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக 16 ஆயிரத்து 122 எண்ணிக்கையுடன் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.

இந்தியாவிலேயே நகரங்களில் அதிகமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியலில், சென்னை தான் முதல் இடத்தில் உள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் சென்னையில் 2 ஆயிரத்து 214 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததற்கான முக்கிய காரணமாக குடும்பப் பிரச்சினைகள், சுகவீனம் என்று கூறப்பட்டாலும் கடன் தான் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு, மொத்தம் 4 லட்சத்து 81 ஆயிரத்து 805 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 107 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 69 ஆயிரத்து 95 விபத்துகள் கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் 77 ஆயிரத்து 756 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், இந்தியாவிலேயே அதிகளவு எண்ணிக்கையிலான விபத்துகள் நடைபெற்றுள்ள மாநிலங்களில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum