Top posting users this month
No user |
அரசு அதிகாரிகளுக்கு ரூ.108.6 கோடி லஞ்சம் கொடுத்தோம்: அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு
Page 1 of 1
அரசு அதிகாரிகளுக்கு ரூ.108.6 கோடி லஞ்சம் கொடுத்தோம்: அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு
இந்தியாவில் அரசு கட்டுமான துறை ஒப்பந்தங்களை பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு ரூ.108.6 கோடி லஞ்சம் கொடுத்தோம் என அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த கட்டுமான நிறுவனமான லூயிஸ் பெர்கர் இன்டர்நேஷனல், இந்தியாவில் கோவா மற்றும் கவுகாத்தியில் மேற்கொள்ப்பட்ட 2 மிகப்பெரிய நீர்வளர்ச்சி திட்டத்தின் கட்டுமான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகள் பலருக்கும், 1998ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்தது தெரியவந்துள்ளது.
ஒப்பந்தம் பெறுவதற்கு இடையில் இருந்து செயல்பட்ட சில அதிகாரிகளுக்கும் சட்ட விரோதமாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ள லூயிஸ் பெர்கர் நிறுவனம், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட முன்னாள் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும்.
இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் 2010ம் ஆண்டிற்கு முந்தையது. 2010ம் ஆண்டிற்கு பிறகு நிறுவனம் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டு, புதிய கொள்கைகள், நடமுறைகளின்படி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த கட்டுமான நிறுவனமான லூயிஸ் பெர்கர் இன்டர்நேஷனல், இந்தியாவில் கோவா மற்றும் கவுகாத்தியில் மேற்கொள்ப்பட்ட 2 மிகப்பெரிய நீர்வளர்ச்சி திட்டத்தின் கட்டுமான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகள் பலருக்கும், 1998ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்தது தெரியவந்துள்ளது.
ஒப்பந்தம் பெறுவதற்கு இடையில் இருந்து செயல்பட்ட சில அதிகாரிகளுக்கும் சட்ட விரோதமாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ள லூயிஸ் பெர்கர் நிறுவனம், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட முன்னாள் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும்.
இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் 2010ம் ஆண்டிற்கு முந்தையது. 2010ம் ஆண்டிற்கு பிறகு நிறுவனம் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டு, புதிய கொள்கைகள், நடமுறைகளின்படி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum