Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது! அத்துமீறல்களை தடுக்க போராட்டம் நடத்துவதே ஒரே வழி!

Go down

இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது! அத்துமீறல்களை தடுக்க போராட்டம் நடத்துவதே ஒரே வழி! Empty இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது! அத்துமீறல்களை தடுக்க போராட்டம் நடத்துவதே ஒரே வழி!

Post by oviya Wed Jun 24, 2015 3:34 pm

முல்லைத்தீவில் தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல்களால் எற்றுபடும் பாதிப்புக்களை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அத்துமீறல்களை தடுக்க எதிர்ப்புப் போராட்டம் நடத்துவதே ஒரே வழி என்று அப்பகுதி கடற்றொழில் சமூகத்தினர் உறுதி பூண்டுள்ளனர்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு கப்பல் துறை வீதி கடற்றொழிலாளர் கூட்டுறறவு சங்கத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட மீனவ சமூகத்தினராலேயே மேற்படி கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடபகுதி மீனவர்களை பலப்படுத்தும் செயற்றிட்டம் மாவட்டம் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் வகையில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு கப்பல் துறை வீதி கடற்றொழிலாளர் கூட்டுறறவு சங்கத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மீனவர் சமூகம் எதிரகொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்து. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தெற்கு மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.

இதற்கு இங்குள்ள அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். அவர்களை இங்கு வரவேண்டாம் என்று கூறவில்லை. பூர்வீகமாக அனுமதிக்கப்படட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுபதற்கு நாம் மறுப்பில்லை. ஆனால் மேலதிகமாக வருகை தருவதை தடைசெய்ய வேண்டும்.

மேலும் அவர்கள் தடைசெய்யப்பட்ட தொழில் உபகரணங்களை பயன்படுத்தி மீன்படியில் ஈடுபடுகின்றமையால் உள்ளூர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்திய இழுவைப் படகுகளின் வருகையும் உள்ளூர் தொழிலாளர்களின் தொழில் முறையில் நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றது என்னும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல்களினால் உள்ளுர் மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் ஆதங்கங்களை வெளிப்படுத்தினர். இதுமட்டுமல்லாமல் முள்ளிவாய்க்கால் தொடங்கி வட்டுவாகல் வரைக்குமான பல மைல்கள் தூரத்தை கடற்படையினர் தமது ஆக்கிரமிப்பின் கீழ் வைத்துள்ளனர்.

இதனாலும் முல்லை. மாவட்ட மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர். மேலும் முல்லைத்தீவில் சுற்றுலா துறைமுகம் அமைப்பது தொடர்பாக மக்களுக்கு பிரச்சினைகள் இல்லை. ஆனால் அவர்களுடைய தொழில் துறைகள் பாதிக்காத வகையில் அவை அமைக்கப்பட வேண்டும்.

மீனவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுப்பதற்கு யாரும் இல்லை. அரசியல்வாதிகளும் வந்து செல்லுகின்றார்களே தவிர ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்கின்றார்கள் இல்லை.

இதனால் அரசியல் வாதிகளை நம்புவதை விடுத்து நாம் எம்மை பலப்படுத்தி தொடர்ந்து போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம். போராடவும் தயாராக உள்ளோம் என்றும் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum