Top posting users this month
No user |
பிரகீத் எக்னெலிகொட வழக்கில் சிக்கிய 22 தொலைபேசிகள்
Page 1 of 1
பிரகீத் எக்னெலிகொட வழக்கில் சிக்கிய 22 தொலைபேசிகள்
காணாமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வு பிரிவினர் 22 தொலைபேசிகள் குறித்து தகவல்களை பெற்றுள்ளனர்.
குறித்த தொலைபேசிகளுக்கு சென்ற அழைப்புக்கள் குறித்து விசாரணையும் நடத்தியுள்ளனர்.
அந்த 22 தொலைபேசிகளிலும் பல சிம் அட்டைகள் போடப்பட்டு அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
அத்துடன் இந்த 22 தொலைபேசிகளை இலங்கைக்குள் எடுத்து வந்தது யார் என்பது தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பை சுங்கப் பிரிவிற்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தொலைபேசியில் மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் குறித்து தகவல்களை வழங்குமாறு தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும், அந்த அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு அறிக்கைகளும் கிடைக்கப் பெற்றதன் பின்னர் இவ்வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்
குறித்த தொலைபேசிகளுக்கு சென்ற அழைப்புக்கள் குறித்து விசாரணையும் நடத்தியுள்ளனர்.
அந்த 22 தொலைபேசிகளிலும் பல சிம் அட்டைகள் போடப்பட்டு அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
அத்துடன் இந்த 22 தொலைபேசிகளை இலங்கைக்குள் எடுத்து வந்தது யார் என்பது தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பை சுங்கப் பிரிவிற்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தொலைபேசியில் மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் குறித்து தகவல்களை வழங்குமாறு தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாகவும், அந்த அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு அறிக்கைகளும் கிடைக்கப் பெற்றதன் பின்னர் இவ்வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum