Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


55 வயது முதியவரை காதலித்து மணந்த 24 வயது மாணவி

Go down

55 வயது முதியவரை காதலித்து மணந்த 24 வயது மாணவி Empty 55 வயது முதியவரை காதலித்து மணந்த 24 வயது மாணவி

Post by oviya Fri Jun 19, 2015 3:33 pm

திருவாரூரில் 24 வயது பட்டதாரி மாணவி ஒருவர் 55 வயது முதியவரை காதலித்து மணந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுபாளையம் மேல தெருவை சேர்ந்த சிங்காரவேலு, ஓய்வு பெற்ற அரசு ஊழியவருக்கு மைனாவதி என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். அவரது 4வது மகள் ஸ்ரீமீளா (24), பி.எட். படித்து வந்துள்ளார்.

ஸ்ரீமீளா கடந்த மாதம் திருவாரூரில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வருவதாக சென்ற அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.

இதையடுத்து கடந்த மாதம் 31ம் திகதி சிங்காரவேலு திருத்துறைப்பூண்டி பொலிசாரிடம் புகார் அளித்ததை அடுத்து, பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீமீளாவை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீமீளா, திருத்துறைப்பூண்டியை அடுத்த சீளத்தநல்லூர் கீழத்தெருவை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி 2 மகன்கள் உள்ள பெயிண்டர் கண்ணன் (55) என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பெற்றோர் முன்னிலையில் விசாரணை நடத்தியபோது ஸ்ரீமீளா பெற்றோருடன் செல்ல மறுத்துள்ளார்.

மேலும், அவர் தனது காதல் கணவர் கண்ணனுடன் செல்ல அனுமதிக்குமாறு கூறியதை அடுத்து பொலிசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum