Top posting users this month
No user |
Similar topics
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 237 ஆக அதிகரிக்க ஐ.தே.க எதிர்ப்பு
Page 1 of 1
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 237 ஆக அதிகரிக்க ஐ.தே.க எதிர்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களை 237 ஆக அதிகரிக்கும் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எட்டப்பட்டதாக கட்சியின் பொருளாளரும், பிரதி அமைச்சருமான எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
20வது அரசியலமைப்பின் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் நேற்று வழங்கப்பட்டது.
இதன்படி தற்போது 225 ஆகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 237ஆக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொகுதி முறைமையில் 145 பேரும், மாவட்ட ரீதியாக 55 பேரும், தேசிய பட்டியலின் ஊடாக 37 பேருமாக மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாகயிருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது இந்த யோசனை மக்களின் விருப்பங்களுக்கு மாறாகவே காணப்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது காணப்படும் பிரச்சினைகளின் காரணமாக நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்கத்தின் யோசனை நாளுக்கு நாள் வேறுப்பட்டு காணப்படுவதன் காரணமாக 20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எவ்வித கருத்தையும் தற்போதைக்கு எட்டமுடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமல்லாது 20இல் காணப்படும் உறுப்பினர்களின் தெரிவு முறைமைக்கு தான் எதிர்ப்பு இல்லை எனவும், எவ்வாறாகயிருப்பினும் அமைச்சரவை குறித்த யோசனை தொடர்பில் கலந்துரையாடும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் பொது செயலாளர் பாட்டலி சம்பிக்க தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எட்டப்பட்டதாக கட்சியின் பொருளாளரும், பிரதி அமைச்சருமான எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
20வது அரசியலமைப்பின் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் நேற்று வழங்கப்பட்டது.
இதன்படி தற்போது 225 ஆகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 237ஆக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொகுதி முறைமையில் 145 பேரும், மாவட்ட ரீதியாக 55 பேரும், தேசிய பட்டியலின் ஊடாக 37 பேருமாக மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாகயிருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது இந்த யோசனை மக்களின் விருப்பங்களுக்கு மாறாகவே காணப்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது காணப்படும் பிரச்சினைகளின் காரணமாக நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்கத்தின் யோசனை நாளுக்கு நாள் வேறுப்பட்டு காணப்படுவதன் காரணமாக 20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எவ்வித கருத்தையும் தற்போதைக்கு எட்டமுடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமல்லாது 20இல் காணப்படும் உறுப்பினர்களின் தெரிவு முறைமைக்கு தான் எதிர்ப்பு இல்லை எனவும், எவ்வாறாகயிருப்பினும் அமைச்சரவை குறித்த யோசனை தொடர்பில் கலந்துரையாடும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் பொது செயலாளர் பாட்டலி சம்பிக்க தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 இருந்து 255 ஆக அதிகரிக்க இணக்கம் - விகிதாசார முறை இரத்து?
» இந்திய இராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
» இந்திய இராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை
» நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum