Top posting users this month
No user |
விஜேதாஸ ராஜபக்சவின் கருத்தால் அதிருப்தியடைந்துள்ள சிங்கள ராவய
Page 1 of 1
விஜேதாஸ ராஜபக்சவின் கருத்தால் அதிருப்தியடைந்துள்ள சிங்கள ராவய
இலங்கை சிங்கள நாடல்ல இலங்கையர்களின் நாடென நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச வெளியிட்ட கருத்திற்கு சிங்கள ராவய அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மிமன தயாரத்ன தேரர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சரின் இவ்வாறான ஒரு கருத்தினால் அவ்வமைப்பு அதிருப்தியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் விஜேதாஸ ராஜபக்சவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச இவ்வாறானதொரு கருத்தை வெளியிடுவார் என என் வாழ்நாளில் நான் நினைக்கவில்லை.
நான் ஒரு பௌத்தன் நானும் அவர் மேல் அன்பு வைத்துள்ளேன் அவரும் என் மீது அன்பு வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விஜேதாஸ ராஜபக்சவுடன் நல்ல ஒரு உறவை கட்டியெழுப்பியுள்ளோம். எனினும் அமைச்சர் இவ்வாறானதொரு கருத்தை வெளியிடுவார் நான் நினைக்கவில்லை.
மேலும் இவரின் கருத்தினால் நாங்கள் மிகவும் மனவேதனையடைந்துள்ளதுடன், மீண்டும் இவ்வாறான ஒருவரை நாடாளுமன்ற அமைச்சராக மக்கள் நியமித்தால் சிங்களவர்களுக்காக குரல் கொடுக்கும் எங்கள் அமைப்பை கலைத்துவிடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மிமன தயாரத்ன தேரர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சரின் இவ்வாறான ஒரு கருத்தினால் அவ்வமைப்பு அதிருப்தியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் விஜேதாஸ ராஜபக்சவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச இவ்வாறானதொரு கருத்தை வெளியிடுவார் என என் வாழ்நாளில் நான் நினைக்கவில்லை.
நான் ஒரு பௌத்தன் நானும் அவர் மேல் அன்பு வைத்துள்ளேன் அவரும் என் மீது அன்பு வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விஜேதாஸ ராஜபக்சவுடன் நல்ல ஒரு உறவை கட்டியெழுப்பியுள்ளோம். எனினும் அமைச்சர் இவ்வாறானதொரு கருத்தை வெளியிடுவார் நான் நினைக்கவில்லை.
மேலும் இவரின் கருத்தினால் நாங்கள் மிகவும் மனவேதனையடைந்துள்ளதுடன், மீண்டும் இவ்வாறான ஒருவரை நாடாளுமன்ற அமைச்சராக மக்கள் நியமித்தால் சிங்களவர்களுக்காக குரல் கொடுக்கும் எங்கள் அமைப்பை கலைத்துவிடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum