Top posting users this month
No user |
10 மில்லியனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற சட்டத்தரணியை விலைக்கு வாங்கிய ராஜபக்ச குடும்பம்
Page 1 of 1
10 மில்லியனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற சட்டத்தரணியை விலைக்கு வாங்கிய ராஜபக்ச குடும்பம்
கடந்த ஆட்சி காலத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவையில் இடம்பெற்ற மோசடிகளை அம்பலப்படுத்திய பிரபல சட்டத்தரணி வெலியமுனவை இலக்குவைத்து பிரச்சாரங்களை மேற்கொள்ள ராஜபக்ச குடும்பம் சூழ்ச்சி செய்துவருகின்றது.
இதற்காக தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்த நாமல் ராஜபக்சவும்,நிசாந்த விக்கிரமசிங்கவும் தீர்மானித்துள்ளனரை்.
வெலியமுன குழுவினர் மேற்கொண்ட விசாரணைகள் மூலமாக வெளிக்கொணரப்பட்டுள்ள விடயங்களினால் கொதித்து போயுள்ள ராஜபக்ச குடும்பத்தினர்,
வெலியமுன குழுவினரின் பரிந்துரைகளை செல்லுபடியற்றதாக்க உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடவும் தீர்மானித்துள்ளனர்.
இதற்காக அவர்கள் சட்டத்தரணிகளையும் ஏற்பாடு செய்து வருவதுடன், தங்களுக்கு விசுவாசமான சட்டத்தரணிகளின் உதவியையும் நாடியுள்ளனர்.
மேலும் குறித்த நடவடிக்கைகளுக்காக கஞ்சத்தனமின்றி பணத்தை செலவிட்டு வருகின்றனர்.
ஆட்சியில் இல்லாத போதும் இவர்கள் தாராள மனப்பான்மையுடன் செலவிடுவதற்கு எங்கிருந்து பணம் வருகின்றது என அரசியல் ஆய்வாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இது தொடர்பில் நாமலினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தை சேர்ந்த சட்டத்தரணியொருவர் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்காக 10 மில்லியனை கோரியுள்ளார்.
குறித்த சட்டத்தரணி கோரிய பணத்தை எவ்வித தயக்கமுமின்றி நாமல் குழுவினர் வழங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் நாமல் ராஜபக்ச விமானசேவை துறையுடன் தொடர்புபட்ட பல தொழிற்சங்கங்களுக்கும் பணம் வழங்கி சட்டத்தரணி வெலியமுனவிற்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுமாத்திரமல்லாது ராஜபக்சவிற்கு விசுவாசமான ஊடகவியலாளர்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்கவின் மகன் டில்சானே இந்த நடவடிக்கைகளுக்கான பணத்தை செலவிட்டு வருகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பல சீன அபிவிருத்தி திட்டங்களுக்கு டில்சானே முகவராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் வசிக்கும் இவர் இலங்கையில் மீண்டும் இன்னொரு ராஜபக்ச யுகத்தை ஏற்படுத்துவதற்காக பணத்தை செலவிட்டு வருகின்றார்.
இந்நிலையில் இவரது பணப்பரிமாற்றம் குறித்து விசேட பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்காக தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகங்களை பயன்படுத்த நாமல் ராஜபக்சவும்,நிசாந்த விக்கிரமசிங்கவும் தீர்மானித்துள்ளனரை்.
வெலியமுன குழுவினர் மேற்கொண்ட விசாரணைகள் மூலமாக வெளிக்கொணரப்பட்டுள்ள விடயங்களினால் கொதித்து போயுள்ள ராஜபக்ச குடும்பத்தினர்,
வெலியமுன குழுவினரின் பரிந்துரைகளை செல்லுபடியற்றதாக்க உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடவும் தீர்மானித்துள்ளனர்.
இதற்காக அவர்கள் சட்டத்தரணிகளையும் ஏற்பாடு செய்து வருவதுடன், தங்களுக்கு விசுவாசமான சட்டத்தரணிகளின் உதவியையும் நாடியுள்ளனர்.
மேலும் குறித்த நடவடிக்கைகளுக்காக கஞ்சத்தனமின்றி பணத்தை செலவிட்டு வருகின்றனர்.
ஆட்சியில் இல்லாத போதும் இவர்கள் தாராள மனப்பான்மையுடன் செலவிடுவதற்கு எங்கிருந்து பணம் வருகின்றது என அரசியல் ஆய்வாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இது தொடர்பில் நாமலினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தை சேர்ந்த சட்டத்தரணியொருவர் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்காக 10 மில்லியனை கோரியுள்ளார்.
குறித்த சட்டத்தரணி கோரிய பணத்தை எவ்வித தயக்கமுமின்றி நாமல் குழுவினர் வழங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் நாமல் ராஜபக்ச விமானசேவை துறையுடன் தொடர்புபட்ட பல தொழிற்சங்கங்களுக்கும் பணம் வழங்கி சட்டத்தரணி வெலியமுனவிற்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுமாத்திரமல்லாது ராஜபக்சவிற்கு விசுவாசமான ஊடகவியலாளர்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்கவின் மகன் டில்சானே இந்த நடவடிக்கைகளுக்கான பணத்தை செலவிட்டு வருகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பல சீன அபிவிருத்தி திட்டங்களுக்கு டில்சானே முகவராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் வசிக்கும் இவர் இலங்கையில் மீண்டும் இன்னொரு ராஜபக்ச யுகத்தை ஏற்படுத்துவதற்காக பணத்தை செலவிட்டு வருகின்றார்.
இந்நிலையில் இவரது பணப்பரிமாற்றம் குறித்து விசேட பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum