Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை! இரண்டே நிமிடத்தில் தீர்ப்பை வாசித்த நீதிபதி

Go down

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை! இரண்டே நிமிடத்தில் தீர்ப்பை வாசித்த நீதிபதி Empty ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை! இரண்டே நிமிடத்தில் தீர்ப்பை வாசித்த நீதிபதி

Post by oviya Mon May 11, 2015 1:06 pm

நீதிமன்றத்தின் அறை எண் 14-க்குள் காலை 11 மணிக்கு நுழைந்த நீதிபதி குமாரசாமி எடுத்தவுடன், "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்று தீர்ப்பளித்துள்ளார்.
மூன்றாம் இணைப்பு

தொடர்ந்து தீர்ப்பை வாசித்த அவர், சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது.

எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 11.02 மணிக்கு தீர்ப்பை வழங்கி முடித்த அவர், 11.03 மணிக்கு நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறியுள்ளார்.

தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அதிமுகவினர் "புரட்சித்தலைவி வாழ்க" என கோஷமிட்டதற்கு கர்நாடக பொலிஸார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

ஜெயலலிதா விடுதலை:

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பு வழங்குவதற்காக நீதிபதி குமாரசாமி இன்று காலை 10 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வந்தடைந்தார்.

அதிமுக தரப்பில் வழக்கறிஞர்கள் குமார், செந்தில், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர்கள் சரவணன், தாமரைச் செல்வன் மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பு வழக்கறிஞர்களும் வந்தனர்.

இதனிடையே, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சம்பந்தனும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு வந்தார்.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை ரத்து செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.

3 நிமிடத்தில் தீர்ப்பை வாசித்துவிட்டு நீதிபதி குமாரசாமி, தனது அறைக்கு திரும்பினார்.

இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தீர்ப்பை கொண்டாடினர்.









முதலாம் இணைப்பு

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

1991-96 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 18 ஆண்டுகள் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டார்.

மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 29ம் திகதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து நால்வருக்கும் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனையடுத்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது, சி.ஆர். குமாரசாமி நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஜனவரி 5ம் திகதி தொடங்கிய விசாரணை 41 நாட்கள் நடைபெற்றது, கடந்த மார்ச் மாதம் 11-ல் திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி குமாரசாமி காலை 11 மணிக்கு மேல் அறிவிக்கிறார்.

ஆனால் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார்கள் எனத் தெரிகிறது.

இனிப்பு, பட்டாசுகளுடன் காத்திருக்கும் அதிகமுவினர்

தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், அதிமுக வழக்கறிஞர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பெங்களூருவில் குவிந்துள்ளனர்.

இதனையொட்டி துணை ராணுவ படையினர் உட்பட 1500 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தமிழர்கள் வாழும் பகுதியில் சிறப்பு பந்தல்கள் அமைக்கப்பட்டு இனிப்பு மற்றும் பட்டாசுகளுடன் அதிமுகவினர் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு

பெங்களூரு பொலிஸ் கமிஷனர் ரெட்டி கூறுகையில், ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வெளியாகும் நேரத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தடுக்க, கர்நாடகா உயர்நீதிமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான வழக்கு என்பதால், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அடையாள அட்டை இருப்பவர்களும், வழக்குக்கு சம்பந்தப்பட்டவர்களும் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர், மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum