Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டமைப்பு உறுப்பினர்களே பாராளுமன்றம் செல்லவேண்டும்: துரைராஜசிங்கம்

Go down

எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டமைப்பு உறுப்பினர்களே பாராளுமன்றம் செல்லவேண்டும்: துரைராஜசிங்கம் Empty எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டமைப்பு உறுப்பினர்களே பாராளுமன்றம் செல்லவேண்டும்: துரைராஜசிங்கம்

Post by oviya Thu Apr 30, 2015 1:18 pm

தற்போது இருக்கும் பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வட,கிழக்கில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாத்திரமே செல்ல வேண்டும் என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்
இக்கருத்தில் எமது மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றும்,எமது வாக்குப் பலத்தினை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரான் குடும்பிமலைப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு விவசாய அமைப்புகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பொதுமக்கள் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது எமது நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக பல்வேறு செயற்திட்டங்கள் இடம்பெறுகின்றன. அவற்றை நிறுத்துமாறும் பாராளுமன்றத்தில் 55 உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறான நிலை இன்று ஊழல் செய்தவர்களுக்கு இருக்கின்றது.

நாடு ஒரு நல்ல நிலை நோக்கி சென்று கொண்டிருக்கும் தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்படக் கூடாது. மத்திய அரசில் இனி ஒரு மாற்றம் ஏற்படின் அது தேசிய அரசாங்கம் உருவாகும் விதத்திலேயே அமைய வேண்டும்.

எமது அன்றாட பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வருவதற்கு தற்போது இருக்கும் பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாத்திரமே செல்ல வேண்டும்.இதில் உறுதியாக எமது மக்கள் இருக்க வேண்டும்.

இவ்விடயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக நாம் இருக்க வேண்டும். எமது வாக்குப் பலத்தினை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை அந்தக் கதிரையில் இருந்து இறக்குவோம் என்று யாராவது நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

ஏதோ ஒரு நம்பிக்கையில் வாக்களித்தோம் ஆனால் எம் அனைவரின் ஒற்றுமையான வாக்களிப்பு அதனைச் செய்தது. எவற்றாலும் செய்ய முடியாததை எமது ஒரு புள்ளடி சாதித்தது. எனவே எமது புள்ளடியை முழுமையாக பயனுள்ள விதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எமது மக்கள் வழங்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர்ந்த வேற்று கட்சியை பாராளுமன்றம் செல்ல அனுமதிக்க கூடாது என்பதில் எமது மக்கள் திடமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித்தலைவர் கி.சேயோன், விவசாய அமைச்சின் இணைப்புச் செயலாளர், மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum