Top posting users this month
No user |
ஜே.வி.பிக்கு ஆதரவு வழங்கிய மங்கள: சோமவன்ச
Page 1 of 1
ஜே.வி.பிக்கு ஆதரவு வழங்கிய மங்கள: சோமவன்ச
மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகிய அதன் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தாம் கட்சியினுள் முன்னெடுத்த கிளர்ச்சி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சியினுள் தற்போதுள்ள பிரச்சினை தொடர்பாக புரிந்து செயற்படுமாறு அவர் ஜே.வி.பி உறுப்பினர்களிடமும், பொதுமக்களிடமும் தனது அறிக்கை மூலம் கேட்டு கொண்டுள்ளார்.
ஜே.வி.பியின் மத்திய செயற்குழுவுக்கு தம்மால் முன்வைக்கப்பட்ட சில யோசனைகளையும் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சி தொடர்பிலான கலந்துரையாடல் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு கொண்டிருந்த நிலைப்பாடு தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற நாள் இரவு முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சி வெற்றி பெற்றிருந்தால் அதன் பாதிப்பை மக்கள் விடுதலை முன்னணியே முற்றுமுழுதாக சந்தித்திருக்கும் என அதன் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
அதுமாத்திரமல்லாது எந்த நோக்கத்திற்காக ஜனாதிபதி தேர்தல் நாள் இரவு இச்சூழ்ச்சி நடைபெற்றது என்பது தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர முறைப்பாடு ஒன்றை முன்வைத்தமை அவர் மக்கள் விடுதலை முன்னணிக்கு காட்டிய ஒத்துழைப்பு என சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சியினுள் தற்போதுள்ள பிரச்சினை தொடர்பாக புரிந்து செயற்படுமாறு அவர் ஜே.வி.பி உறுப்பினர்களிடமும், பொதுமக்களிடமும் தனது அறிக்கை மூலம் கேட்டு கொண்டுள்ளார்.
ஜே.வி.பியின் மத்திய செயற்குழுவுக்கு தம்மால் முன்வைக்கப்பட்ட சில யோசனைகளையும் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சி தொடர்பிலான கலந்துரையாடல் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு கொண்டிருந்த நிலைப்பாடு தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற நாள் இரவு முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சி வெற்றி பெற்றிருந்தால் அதன் பாதிப்பை மக்கள் விடுதலை முன்னணியே முற்றுமுழுதாக சந்தித்திருக்கும் என அதன் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
அதுமாத்திரமல்லாது எந்த நோக்கத்திற்காக ஜனாதிபதி தேர்தல் நாள் இரவு இச்சூழ்ச்சி நடைபெற்றது என்பது தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர முறைப்பாடு ஒன்றை முன்வைத்தமை அவர் மக்கள் விடுதலை முன்னணிக்கு காட்டிய ஒத்துழைப்பு என சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum