Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வறுமையை காரணம் காட்டி பிள்ளைகளின் கல்விக்கு முட்டுக்கட்டையிடாதீர்கள்: அமீர் அலி

Go down

வறுமையை காரணம் காட்டி பிள்ளைகளின் கல்விக்கு முட்டுக்கட்டையிடாதீர்கள்: அமீர் அலி Empty வறுமையை காரணம் காட்டி பிள்ளைகளின் கல்விக்கு முட்டுக்கட்டையிடாதீர்கள்: அமீர் அலி

Post by oviya Wed Apr 29, 2015 12:21 pm

வறுமையை காரணம் காட்டி பிள்ளைகளின் கல்விக்குத் துரோகம் செய்யாதீர்கள் அவ்வாறு செய்தால் அது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும் என சமூர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மத்தி, கல்வி வலயத்திலுள்ள பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் மூன்றாவது சாதனையாளர் பாராட்டு விழா வித்தியாலய முன்றலில் இடம்பெற்றது.

அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பிள்ளைகளுக்கு பெற்றோராகிய நாம் கொடுக்கும் பெரிய சொத்து கல்வி மட்டும் தான். வறுமையை காரணம் காட்டி,பிள்ளைகளின் கல்விக்கு தடை விதித்திடும் பெற்றோர்களாக எவரும் இருக்க வேண்டாம்.

வரலாற்றில் பெரிய அறிஞர்களாக திகழ்ந்த ஒவ்வொருவரின் பின்னணியிலும் வறுமை இருந்தது. அந்த வறுமை தான் அவர்களைக் கல்வியில் பெரிய அறிஞர்களாக மாற்றியது. தனது பிள்ளை கல்வி பயிலும் பாடசாலையுடன் அதிகம் தொடர்பு கொண்ட பெற்றோர்களின் பிள்ளைகள் நிச்சயம் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பாடசாலையுடன் அதிகம் தொடர்பு கொண்ட பெற்றோர்களாக ஒவ்வொரு பெற்றோரும் தங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் தங்கள் பிள்ளைகள் கல்வியில் வெற்றியாளர்களாக நிச்சயம் திகழ்வார்கள் என்றும் அவரது உரையில் தெரிவித்தார்.

வித்தியாலய அதிபர் எம்.யூ.எம்.இஸ்மாயில் தலைமையில் இட்மபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி, ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.மீராசாஹீப், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை நிருவாகத்தினால் அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், பாடசாலையில் சிறந்து விளங்கிய மாணவர்களும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும், பாடசாலைக்கு தவறாமல் தனது பிள்ளைகளை அனுப்பிய பெற்றோரும் அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum