Top posting users this month
No user |
மயூரனுக்காக அறிக்கை விடுத்த ஜுலி பிஷப்
Page 1 of 1
மயூரனுக்காக அறிக்கை விடுத்த ஜுலி பிஷப்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ரூசன் ஆகிய இருவரது மரண தண்டனையை ஒத்திவைக்குமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் இந்தோனேஷியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாலி-9 எனும் இந்த வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட 10 பேருக்குமான மரண தண்டனை இன்னும் 72 மணிநேரத்தில் நிறைவேற்றப்படும் என இந்தோனேஷியாவின் வெளிவிவகார அமைச்சர் ரெட்னோ மர்சுதி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே அவுஸ்திரேலிய வெளிவவிகார அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ரூசன் ஆகிய இரு சந்தேக நபர்கள் மீதான விசாரணைகள் நீதித்துறை ஆணைக்குழுவில் இடம்பெற்றுவருவதாக சுட்டிக்காட்டிய ஜுலி பிஷப் அவர்களுக்கான மரண தண்டனையை ஒத்திவைக்குமாறும் கோரியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு கடந்த 2006ம் ஆண்டு அந்நாட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட 8 வெளிநாட்டுப் பிரஜைகளுக்கும் ஜகார்த்தா நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த அவுஸ்திரேலியப் பிரஜைகளை விடுவிப்பதற்குரிய முழுமூச்சான முயற்சிகளை இந்தோனேஷியாவிலுள்ள அவர்கள் சார்பிலான வழக்கறிஞர் ஈடுபட்டுவருவதாக ஜுலி பிஷப் சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இறுதி முயற்சியாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி எப்போட் இந்தோனேஷிய ஜனாதிபதி விடோடோவிற்கு கருணை மனு அடங்கிய கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்தோனேஷிய அரசாங்கம் நாளை இரவு இவர்களுக்கான மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாலி-9 எனும் இந்த வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட 10 பேருக்குமான மரண தண்டனை இன்னும் 72 மணிநேரத்தில் நிறைவேற்றப்படும் என இந்தோனேஷியாவின் வெளிவிவகார அமைச்சர் ரெட்னோ மர்சுதி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே அவுஸ்திரேலிய வெளிவவிகார அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ரூசன் ஆகிய இரு சந்தேக நபர்கள் மீதான விசாரணைகள் நீதித்துறை ஆணைக்குழுவில் இடம்பெற்றுவருவதாக சுட்டிக்காட்டிய ஜுலி பிஷப் அவர்களுக்கான மரண தண்டனையை ஒத்திவைக்குமாறும் கோரியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு கடந்த 2006ம் ஆண்டு அந்நாட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட 8 வெளிநாட்டுப் பிரஜைகளுக்கும் ஜகார்த்தா நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த அவுஸ்திரேலியப் பிரஜைகளை விடுவிப்பதற்குரிய முழுமூச்சான முயற்சிகளை இந்தோனேஷியாவிலுள்ள அவர்கள் சார்பிலான வழக்கறிஞர் ஈடுபட்டுவருவதாக ஜுலி பிஷப் சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இறுதி முயற்சியாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி எப்போட் இந்தோனேஷிய ஜனாதிபதி விடோடோவிற்கு கருணை மனு அடங்கிய கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்தோனேஷிய அரசாங்கம் நாளை இரவு இவர்களுக்கான மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum