Top posting users this month
No user |
வாகன விபத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் காயம்!
Page 1 of 1
வாகன விபத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் காயம்!
கொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை நகரில் வீதிக்கடவையில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த இரு மாணவிகள் மீது தலவாக்கலை நோக்கி பயணித்த லொறி ஒன்று மோதியதினாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக திம்புள்ள பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த இரண்டு மாணவிகளும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தகரமலை தோட்டத்தை சேர்ந்த 10 வயதுடைய மாணவிகள் என தெரியவந்துள்ளது.
மேலும் இவ்விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை திம்புள்ள பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை நகரில் வீதிக்கடவையில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த இரு மாணவிகள் மீது தலவாக்கலை நோக்கி பயணித்த லொறி ஒன்று மோதியதினாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக திம்புள்ள பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த இரண்டு மாணவிகளும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தகரமலை தோட்டத்தை சேர்ந்த 10 வயதுடைய மாணவிகள் என தெரியவந்துள்ளது.
மேலும் இவ்விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை திம்புள்ள பொலிசார் கைது செய்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum