Top posting users this month
No user |
Similar topics
பீகாரை சூரையாடிய சூறாவளி: 65 பேர் பலி, பலர் படுகாயம்
Page 1 of 1
பீகாரை சூரையாடிய சூறாவளி: 65 பேர் பலி, பலர் படுகாயம்
பீகாரில் வீசிய திடீர் சூறாவளிக்கு 65 பேர் பலியாகியுள்ளதோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பீகாரில் செவ்வாய்க் கிழமையன்று நள்ளிரவு, அங்குள்ள பூர்ணியா, மாதேபுரா, சஹார்ஸா, மதுபானி, சமஸ்திபூர், தர்பங்கா ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீசியுள்ளது.
இதில், ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைப் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு மின்சார கம்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் சேதமடைந்ததோடு, சோளம், கோதுமை, பயறு வகைகள் ஆகிய பயிர்கள் நாசமடைந்துள்ளன.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நிதீஷ் குமார் புதன்கிழமை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிகாரில் சூறாவளியால் பயிர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்ச்சேதங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
சூறாவளிக்கு பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும்.
சூறாவளியால் ஏற்பட்ட பயிர்ச் சேதம், பொருள் சேதங்களுக்கு நிவாரண உதவித் தொகை, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைகள் கிடைத்ததும் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதனிடையே, பீகாரில் சூறாவளிக்கு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், பீகாரில் வீசிய சூறாவளி காற்றுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது குறித்து கேள்விப்பட்டு வேதனையடைந்துள்ளேன்.
மேலும், இந்த துரதிருஷ்டவசமான நேரத்தில், பீகார் மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பீகாரில் செவ்வாய்க் கிழமையன்று நள்ளிரவு, அங்குள்ள பூர்ணியா, மாதேபுரா, சஹார்ஸா, மதுபானி, சமஸ்திபூர், தர்பங்கா ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீசியுள்ளது.
இதில், ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைப் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு மின்சார கம்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் சேதமடைந்ததோடு, சோளம், கோதுமை, பயறு வகைகள் ஆகிய பயிர்கள் நாசமடைந்துள்ளன.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நிதீஷ் குமார் புதன்கிழமை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிகாரில் சூறாவளியால் பயிர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்ச்சேதங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
சூறாவளிக்கு பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும்.
சூறாவளியால் ஏற்பட்ட பயிர்ச் சேதம், பொருள் சேதங்களுக்கு நிவாரண உதவித் தொகை, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைகள் கிடைத்ததும் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதனிடையே, பீகாரில் சூறாவளிக்கு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், பீகாரில் வீசிய சூறாவளி காற்றுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது குறித்து கேள்விப்பட்டு வேதனையடைந்துள்ளேன்.
மேலும், இந்த துரதிருஷ்டவசமான நேரத்தில், பீகார் மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிவன் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்: 11 பேர் பலி, பலர் படுகாயம்
» பிரதமர் மோடியின் தொகுதியில் பயங்கர கலவரம்: பொலிசார் உள்பட 12 பேர் படுகாயம்
» கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற பஸ் விபத்து: நால்வர் பலி! 35 பேர் படுகாயம்
» பிரதமர் மோடியின் தொகுதியில் பயங்கர கலவரம்: பொலிசார் உள்பட 12 பேர் படுகாயம்
» கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற பஸ் விபத்து: நால்வர் பலி! 35 பேர் படுகாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum