Top posting users this month
No user |
பன்றிக்கு அருள் கொடுத்த பாலசுப்பிரமணியர் கோவில்
Page 1 of 1
பன்றிக்கு அருள் கொடுத்த பாலசுப்பிரமணியர் கோவில்
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் நகரில் இக்கோவில் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் சனீஸ்வரர் கோவில், வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில்கள் போல் மாவட்டத்தின் புகழுக்கு உதாரணமாக மாவட்டத்திலேயே மிகப்பெரும் கோவிலாக இது விளங்குகிறது.
பாலசுப்பிரமணியர் கோவில் என்றவுடன் இது முருகன் கோவில் என்று அர்த்தமில்லை. இது ஒரு சிவன் கோவில் ராஜேந்திர சோழன் கட்டிய கோவில் என்பதால் ராஜேந்திர சோழீஸ்வரர் என இங்குள்ள சிவபெருமான் புகழ்பெறுகிறார். ஒரே கோயிலில் தனித்தனி சன்னதிகளில் சிவன், அம்பாள், முருகன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
சுற்றுப்பிரகாரத்தில் நடராஜர், தம்பதி சமேதராக சூரியன், சந்திரன், ஏகாம்பரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, ஜுரதேவர், சப்தகன்னிகள், ஜம்புகேஸ்வரர், பைரவர், ராகு கேது மற்றும் மகாவிஷ்ணு ஆகியோர் தனி தனி சன்னதிகளில் அருள்புரிகின்றனர். சோழமன்னர் கால கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது இக்கோவில்.
அகோரவீரபுத்திரர், ருத்ரதாண்டவர், துர்க்கை, மன்மதன் ஆகியோரும் அமைந்துள்ளனர். இங்குள்ள முருகப்பெருமானான பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்தால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இக்கோவில் இங்கு புகழ் பெற்ற வராக நதிக்கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வராக நதிக்கரையில் நீராடினால் காசியில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள மயில் மண்டபத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மற்றொரு சிறப்பு இங்குள்ள மிருத்யுஞ்சர் சன்னதி இவர் மரணத்தை வென்றவர் என்பதால் அதிக அளவில் அறுபது, எண்பது திருமணங்கள் இங்கு நடைபெறுகிறது. இந்த ஊரை ஆண்டு வந்த ராஜேந்திர சோழன் ஒருமுறை இங்குள்ள அகமலை காட்டுக்கு வேட்டைக்கு சென்றார்.
அப்போது குட்டிகளோடு வந்த தாய்ப்பன்றியை தன் வில்லால் சாய்த்துவிட்டார். பன்றி இறந்ததை அறிந்த குட்டிகள் அழுதன. குட்டிகளின் நிலை பொறுக்காது அங்கு வந்த முருகப்பெருமான் குட்டிகளுக்கு பால் கொடுத்தார்.
பன்றிகளுக்கு உதவிய முருகப்பெருமானை கண்டு மகிழ்ந்த சோழ மன்னன் மனம் திருந்தி முருகப்பெருமானின் இரக்க சிந்தனையை உணர்த்தும் விதமாக இந்த பரந்து விரிந்த கோவிலை கட்டினான். சிவன் கோவிலாக இருந்தாலும் பேச்சு வழக்கில் இது பாலசுப்பிரமணியர் கோவில் என்றே இக்கோவில் அழைக்கப்படுகிறது.
செல்லும் வழி: சென்னையில் இருந்து தேனி அல்லது திண்டுக்கல் சென்று அங்கிருந்து பெரியகுளம் செல்லலாம். நகரப்பகுதி என்பதால் பெரியகுளத்திற்க்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
பாலசுப்பிரமணியர் கோவில் என்றவுடன் இது முருகன் கோவில் என்று அர்த்தமில்லை. இது ஒரு சிவன் கோவில் ராஜேந்திர சோழன் கட்டிய கோவில் என்பதால் ராஜேந்திர சோழீஸ்வரர் என இங்குள்ள சிவபெருமான் புகழ்பெறுகிறார். ஒரே கோயிலில் தனித்தனி சன்னதிகளில் சிவன், அம்பாள், முருகன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
சுற்றுப்பிரகாரத்தில் நடராஜர், தம்பதி சமேதராக சூரியன், சந்திரன், ஏகாம்பரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, ஜுரதேவர், சப்தகன்னிகள், ஜம்புகேஸ்வரர், பைரவர், ராகு கேது மற்றும் மகாவிஷ்ணு ஆகியோர் தனி தனி சன்னதிகளில் அருள்புரிகின்றனர். சோழமன்னர் கால கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது இக்கோவில்.
அகோரவீரபுத்திரர், ருத்ரதாண்டவர், துர்க்கை, மன்மதன் ஆகியோரும் அமைந்துள்ளனர். இங்குள்ள முருகப்பெருமானான பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்தால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இக்கோவில் இங்கு புகழ் பெற்ற வராக நதிக்கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வராக நதிக்கரையில் நீராடினால் காசியில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள மயில் மண்டபத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மற்றொரு சிறப்பு இங்குள்ள மிருத்யுஞ்சர் சன்னதி இவர் மரணத்தை வென்றவர் என்பதால் அதிக அளவில் அறுபது, எண்பது திருமணங்கள் இங்கு நடைபெறுகிறது. இந்த ஊரை ஆண்டு வந்த ராஜேந்திர சோழன் ஒருமுறை இங்குள்ள அகமலை காட்டுக்கு வேட்டைக்கு சென்றார்.
அப்போது குட்டிகளோடு வந்த தாய்ப்பன்றியை தன் வில்லால் சாய்த்துவிட்டார். பன்றி இறந்ததை அறிந்த குட்டிகள் அழுதன. குட்டிகளின் நிலை பொறுக்காது அங்கு வந்த முருகப்பெருமான் குட்டிகளுக்கு பால் கொடுத்தார்.
பன்றிகளுக்கு உதவிய முருகப்பெருமானை கண்டு மகிழ்ந்த சோழ மன்னன் மனம் திருந்தி முருகப்பெருமானின் இரக்க சிந்தனையை உணர்த்தும் விதமாக இந்த பரந்து விரிந்த கோவிலை கட்டினான். சிவன் கோவிலாக இருந்தாலும் பேச்சு வழக்கில் இது பாலசுப்பிரமணியர் கோவில் என்றே இக்கோவில் அழைக்கப்படுகிறது.
செல்லும் வழி: சென்னையில் இருந்து தேனி அல்லது திண்டுக்கல் சென்று அங்கிருந்து பெரியகுளம் செல்லலாம். நகரப்பகுதி என்பதால் பெரியகுளத்திற்க்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum