Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


19ம் திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: சட்டமா அதிபர், பிரதமர்

Go down

19ம் திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: சட்டமா அதிபர், பிரதமர் Empty 19ம் திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: சட்டமா அதிபர், பிரதமர்

Post by oviya Tue Apr 07, 2015 2:01 pm

19ம் திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என சட்டமா அதிபர் யுவன்ஜன விஜயதிலக்க உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் எந்தவொரு விடயத்திற்கும் சர்ஜன வாக்கெடுப்பின் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் போதுமானது.

நிறைவேற்று அதிகாரம் என்பது மிகப் புனிதமான அதிகாரங்கள் கிடையாது.

நிறைவேற்று அதிகாரத்தை விசேடமானதாக கருதாது, அதன் மாற்றங்களை காலத்தின் தேவையாக கருதப்பட வேண்டும்.

சர்வஜன வாக்கெடுப்பு சுபலமான வழி என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தின் ஊடாகவும் அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்ய முடியும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை: பிரதமர்

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் ஊடாகவே ரத்து செய்ய முடியும்.

அமைச்சரவையின் ஊடாக நாடாளுமன்றிற்கு பொறுப்புச் சொல்லக்கூடிய ஆட்சி முறைமை உருவாக்கப்பட வேண்டும்.

இது தொடாபில் கடந்த தேர்தலில் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு நிறைவேற்று அதிகார முறைமையில் மாற்றம் கொண்டு வர சர்ஜனவாக்கெடுப்பு அவசியமில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அம்பாறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum