Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடக்கு விவசாய அமைச்சில் 61 பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

Go down

வடக்கு விவசாய அமைச்சில் 61 பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் Empty வடக்கு விவசாய அமைச்சில் 61 பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

Post by oviya Wed Mar 25, 2015 12:50 pm

வடமாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய 61 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு நிரந்தர நியமனம் பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உரையாற்றும் போது, அவரது அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை பற்றிய விபரங்களைப் பூரணமாகத் தெரிவித்துள்ளார். வடமாகாண விவசாயத் திணைக்களத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணியின் எண்ணிக்கை 510 ஆனால், 361 பேரே தற்போது சேவையில் உள்ளனர்.

இன்னும் 149 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துக்கென அங்கீகரிக்கப்பட்ட ஆளணியின் எண்ணிக்கை 571,ஆனால் 315 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 256 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதேபோன்று, நீர்ப்பாசனத் திணைக்களத்தில் 124 வெற்றிடங்களும், கூட்டுறவு திணைக்களத்தில் 40 வெற்றிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளணிப்பற்றாக்குறை பற்றிய விபரங்களை வெளியிட்ட அமைச்சர் பொ.ஐங்கரநேசன், ஆளணிப்பற்றாக்குறைவு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பாரிய தடையாக இருப்பதாகவும், இவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை திணைக்களத் தலைவர்களும் அமைச்சின் செயலாளரும் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum